Pages

Saturday, 30 April 2011

நிலாச்சோறு…

தாயின் இடுப்பில் இருந்தபடி
வாய் நிறைய உணவோடு
பிஞ்சுக் கைகளை அசைத்து அசைத்து
அந்தக் குழந்தை
அம்மா சொன்னதைக் கேட்டுக் கேட்டு
அப்படியே திருப்பிச் சொல்லி
ஆசை ஆசையாய் அத்தனை முறை அழைத்தும்
வரவே இல்லை அந்த நிலவு..
அதனால் என்ன..
இன்று நிலைவை அழைத்து அசையும் கை..
நாளை நிலவில் நின்று கையசைக்கும் !

No comments:

Post a Comment