Pages

Wednesday, 1 June 2011

காதலின் கைதி......

உனைப் பார்த்துப் பேசியே
பலநாள் ஆகிறது
எனைக் காண 
எப்போது வருவாய்
என்றேன்..!
அவளோ...
'என் பெற்றோரிருக்கின்றனர்
என் உடன் பிறந்தோரிருக்கின்றனர்
உனை இப்போது காண வருவது
இயலாது கண்ணா...
நான் இங்கு கைதியாக இருக்கிறேன்
சூழ்நிலைக் கைதியாகவும்
இருக்கிறேன்' என்றாள்...
என்னை உன் காதலின் கைதியாக்கி விட்டு
நீயோ அங்கே கைதி என்கிறாய்...
இதற்கு நான் யார் மீது குற்றம் சொல்ல..?

No comments:

Post a Comment