Pages

Wednesday, 14 December 2011

சொல்லத் தெரியவில்லை...


ஏனென்று சொல்லத் தெரியவில்லை.
சில முகங்களை
முதன் முறையாய் பார்க்கும்போது
ஏற்கெனவே பார்த்த உணர்வை.
ஏனென்று சொல்லத் தெரியவில்லை.
சிலர் செய்யும் நம்பிக்கை மோசடிகளை
முன்பே எதிர்பார்த்திருந்ததை.
ஏனென்று சொல்லத் தெரியவில்லை.
கைவிட்டதைப் போல்
உணரும் நேரங்களில்
ஒலிக்கும் தொலை பேசியில்
நட்பின் கரம் நீளுமென்று
மனம் கணித்ததை.
ஏனென்று சொல்லத் தெரியவில்லை.
எத்தனை முறை ஏமாந்தாலும்
'உன்னைப் பிடிச்சிருக்கு' என்று
புதிதாய் சொல்லும் நபரிடம்
மனம் பறி கொடுப்பது
தப்பென்று உணர்ந்தாலும்
தடுக்க முடியாததை!

No comments:

Post a Comment