Pages

Thursday, 8 December 2011

பெண்ணே நீ

பெண்ணே நீ 
கவிதையாய் மிளிர்கிறாய் 
காற்றில் தென்றலாய் உலவுகின்றாய் 
கற்பனைகள் அலை மோதும் 
கடலாய் தவழ்கின்றாய் 

காதலின் மெல்லிசையாய் 
கருத்துக்களின் கருவிடமாய் 
கண்மணி நீ உள்ளாய் 
காலத்தின் பெட்டகமாய் 

கவியான வாழ்வு தன்னில் 
கலக்கம் வேண்டாமடி 
கரை தன்னை நீந்திடுவாய் 
கண்ணீர் கூடாதடி 

வலியின் கொடுமை புரிந்து விட்டால் 
வாழ்வின் அர்த்தம் விளங்குமடி 
வளர்ந்து விடடி பெண்ணே நீ.. 
வானம் என்றும் அருகிலடி....

No comments:

Post a Comment