Pages

Monday, 2 January 2012

கோலங்கள்...

சில்லென்று மனம் குளிர
பனித்துளிகளில் துளிர்த்தது
புள்ளி கோலம்
இலைகளின் ஊடே
வெயில் போட்டது
கோட்டு கோலம்
பூக்கள் மலர்ந்து
மணத்தோடு தந்தது
வண்ணக் கோலம்
வானிலை மாற
மழை இட்டது
இழை கோலம்
மழைத்துளியின் தொடலில்
நீர் வரைந்தது
நெளி கோலம
எதுவும் ஈடாகவில்லை
குழந்தையின் அசைவுகள்
தீட்டிய கோலத்தின் முன்...

No comments:

Post a Comment