Pages

Tuesday, 29 July 2014

பசி...

"சாப்பிட்டேன்" என
அம்மாவிடமும்,
"கவலைப்படவில்லை" என
அப்பாவிடமும்,
"அடுத்த மா"தத்திற்குள்
வேலை வாங்கிவிடுவேன்" என
அண்ணனிடமும்,
"முதல் மாதச் சம்பளத்தில்
உனக்கொரு மடிக்கணினி" என
தங்கையிடமும் சொல்ல
முடிந்தது..
"காலையிலிருந்து சாப்பிடல...
ரொம்பப் பசிக்குதுடா,
எதாவது வாங்கிக்கொடு" என
# நண்பனிடம்
மட்டும் தான் கேட்க
முடிந்தது.....

Sunday, 13 July 2014

கனவில் மட்டும் ...

பகல் முழுவதும் இரவாக
வேண்டுமென்று
இறைவனிடம் வேண்டினேன்..!
இரவுநேர கனவில்
மட்டுமே உன்னோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்
சுகத்தை,
நாள் முழுவதும்
அனுபவிக்கவேண்டு
ம்
என்ற பேராசையினால்.....!

Sunday, 6 July 2014

ராஜி...

கவிதையை கூட வெறுக்கிறேன்...என் கவிதைக்கு கரு நீ என்பதால் ...என் இறுதி கவிதை ...பிரியமுடன் பிரியன்...காதலும் வேண்டாம்காதலியும்வேண்டாம்