என்னை தொலைத்து விட்டேன்..
ஆனால் நான் எனை தேடவில்லை..
நான் உன்னுள்ளே பத்திரமாக இருக்கிறேன்..
என் கவிதைகளை தொலைத்து விட்டேன்..
எனை திருடி சென்ற உன்னோடு என்
கவிதைகளை தொலைத்து விட்டேன்..
வந்து விடு..என் கவிதைகளை திருப்பி தந்து விடு...
Saturday, 30 November 2013
thanthu vidu....9566520975
Sunday, 24 November 2013
நினைவு ....
விக்கல்
விக்கல் எடுக்கிறது
தண்ணீர் குடிக்க மனமில்லை.
ஏனெனில் நினைப்பது நீயல்லவா..!!
ஆதலால்....
நிலைக்கட்டும் சில நிமிடங்கள்
இந்த விக்கல்...!!
Friday, 22 November 2013
மௌனம்9566520975
உலகில் எவராலும் புரிந்துகொள்ள முடியாத ஒரே மொழி மௌனம் . இந்த மௌனம் எத்தனை பேரை அழ வைத்திருக்கும். ..???
Wednesday, 20 November 2013
Saturday, 16 November 2013
niyapagam...
நான் நினைத்தவர்கள் என்னை
மறந்ததால் கவலைப்படவில்லை
என்னை மறந்தவர்களை என்னால்
மறக்க முடியவில்லையே என்று
கவலை படுகிறேன்....!!!!
Thursday, 14 November 2013
mutham...
எந்த காதலனும் தன்
காதலிக்கு முத்தம் கொடுக்காமல்
இருந்திருக்க வாய்ப்பில்லை.!
காதல் பிரிந்து கல்யா ணம்
முடிந்தாலும்.!
முதல் முத்தம் பெறுகையில் அந்த
பெண்ணின் நினைவில் முழுதும்
காதலனும் அவன் கொடுத்த முதல்
முத்தம் தான் நினைவில் ஓடும்.!
அந்த ஒரு நொடி போதும் என்னை போன்ற
காதலனுக்கு.!
Monday, 11 November 2013
nee illatha vaanam...
நீ
இல்லாத என் வானம்
விடிந்தும் விடியாமல் போன
மாயம் என்ன?
என் காதல் அன்று
கவிதை தந்தது...
இன்று கண்ணீர் தருகிறது
அன்று கவிதையை ரசிக்க நீயிருந்தாய்...
ஆனால் கண்ணீர் துடைக் நீ இல்லை
இது தான் என் காதலின் நிலையா??
Saturday, 9 November 2013
Unmai paartha naal mutual...
எதிர்பார உன் வருகை...மனதில் பதிந்த
உன் முகம்..மறக்க முடியா உன்
நினைவுகள்..நெருங்கி வரும்
தனிமை...வலிகள் சுமக்கும்
இதயம்...அனுபவிக்கின்றேன்
இவையெல்லாம்உன்னை பார்த்த
நொடி முதல்..
பார்வை9566520975
நீ தினமும் பார்க்கும்
பார்வைக்கு என்ன அர்த்தம்
என்பதை அறிய- அகராதியுடன்
அலைகிறேன் அர்த்தத்தை தேடி...
Wednesday, 6 November 2013
enakku pidithavai...
எனக்கு பிடித்தவை
உயிர் நண்பன் ..
வரம்பு மீறாத பெற்றோர் ...
காலைக்குளிர் ..
இரவு வெயில் ..
மாலை தளிர் ...
ஆவியாய் அலையும் நீர் ..
நீராய் மாறும் புகை ....
முத்தாய் மாறும் மழைத்துளி ..
ஆழ்நீரில் வெயிலில் காயும் மீன் ..
அங்கேயே குளிரில் நடுங்கும் நீர் குமிழி ..
காற்றில் கபடியாடும் பஞ்சு...!!!
கண்ணை ஏமாற்றும் பூப்பிறப்பு ..
விழிகளை கவரும் பூப்படைப்பு ...
சிரிக்கும் அமாவாசை நட்சத்திரம் ...
தூக்கில் தொங்கும் இலை நுனிமழைதுளி ..
ஓசையில்லாத காட்டில் குயில் ஓசை ...
இடம் பெயர்ந்து வரும் உதிர்ந்த இலைகள் ..
புது ஓவியம் படைக்கும் மரக்கிளைகள் ..
உணர்வை தூண்டும் செவ்வானம் ...
உருவம் மாறிய உறைபனி ...
உருகி காதலிக்கும் நீரும் மண்ணும் ...
உண்ண மறக்கும் வேரும் மரமும் ...
வெயில் கால மழை ...!!!
ஓடை ஓரத்தில் முளைத்த காளான் ..
ஒற்றையில் வாழும் ஒருவழி மண்பாதை ..
ஒருநாள் வாழும் உயிரிணம் ..
ஓசை எழுப்பாத இரவு வானம் ...
ஓட்டை வீட்டில் ஒழுகும் மழைநீர் ...
வான் கண்ணீர் மயிலாட்டம் ..
மழைநேர சுடும் தேநீர் ..
கண்களில் விழும் ஒற்றை மழைத்துளி ..
போர்வையை தேடும் குளிர் காலம் ...
மாயம் காட்டும் கடல் பெரு அலை ....
தலையில் விழும் முதல் மழைத்துளி
உரசிப்போகும் ஊடல் காற்று ....
விழிகை ஓயவைக்கும் இளங்காற்று ...
இன்னுமொருமுறை தூங்கா சொல்லும்
கருமேக வான் ....
ஒற்றைப்பாதை சைக்கிள் ஓட்டம் ..
உறங்கும்போது மெல்லிய பாடல் ...
தடக்கி விழுந்து சிரிக்கும் கனவு ...
கனவால் எழுந்து முழிக்கும் முழி ...
நவரத்தினத்தையும் தோற்கவைக்கும்
குழந்தை சிரிப்பு ...
ஒற்றை கிளை மரங்கள் ..
நிஜம் தேடும் உள்ளங்கள் ..
உதடுகள் விரியாத சிரிப்பு ...
ஒற்றைத்துளி கண்ணீர் ..
அலட்டல் இல்லாத அரட்டை ...
அசட்டை இல்லாத சேட்டை ...
அச்சம் இல்லாத அடிதடி ..
சலனம் இல்லாத உள்ளம் ...
சொர்க்கம் தோற்கும் தாய் மடி ..
அறிவுறை சொல்லும் தந்தை ...
சொல்லாமல் எற்படும் வலிகள் ....
சோகம் தணிக்கும் தோழன் தோள்கள் ...
கண்ணீர் துடைக்கும் தோழியின் விரல்கள் ...
நானாக கோபம் தணிக்கும் தருணம் ...
தனியாக சிரிக்க வைக்கும் நினைவுகள் ...
வியப்பாக சிரிக்க வைக்கும் நினைவுகள் ...
வியப்பை ஏற்படுத்தும் வெற்றிகள் ....
சற்றும் எதிர் பாராத இழப்புக்கள் ....
விட்டுக்கொடுத்த தோல்விகள் ....
விடை தெரிந்தும் எழுதாத வினாக்கள் ...
சோகத்தில் சிரிக்கும் உதடு ...
கண்ணீரில் மறையும் கண்கள் ...
விரும்பி ஏற்ற காயங்கள் .......
துன்ப நேர தனி சிறை ...
அளவில்லாத இயற்கை கற்பனை ....
மற்றவர் விரும்பும் சிறு சாகசங்கள் ....
மழைத்துளி வெட்டும் விரல்கள் .....
என்னை வெறுப்பவர்கள் ...
எதிர்பார்த்து நிற்கும் அடுத்த நிகழ்வு ...
ஏடறிவு தந்த ஆசிரியர் ..
குளிர் கால சூரிய உதயம் ..
வெயில் கால சந்திரா உதயம் ..
புற்கள் அணிந்த மலைசாயல் ...
மின்சாரம் இல்லாமல் ஒளிரும்
விண்மீண்கள் ...!!!
இருட்டில் ஓட்டை வழி சூரிய ஒளி ...
நதியில் வருகைதரும் இலைப்பயணம் ...
வர்ணம் சேர்க்கும் வண்ணாத்தி பூச்சி ...
காலையில் பனித்துளி நனைந்த தாமரை ...
நறுமணம் வீசும் மல்லிகை ...
முற்கள் நிறைந்த ரோஜா ...!!!
கூட்டாக உணவு உண்ணும் தேனீ கூட்டம் ...!!!
உயிர் நண்பன் ..
முதல் காதலி ..
வரம்பு மீறாத பெற்றோர் ...
காலைக்குளிர் ..
இரவு வெயில் ..
மாலை தளிர் ...
ஆவியாய் அலையும் நீர் ..
நீராய் மாறும் புகை ....
முத்தாய் மாறும் மழைத்துளி ..
ஆழ்நீரில் வெயிலில் காயும் மீன் ..
அங்கேயே குளிரில் நடுங்கும் நீர் குமிழி ..
காற்றில் கபடியாடும் பஞ்சு...!!!
எண்ணை தரும் சூரிய காந்தி ...
எண்ணிடும் நிமிடங்கள...
என்னை தோற்கவைக்கும் வர்ணங்கள் ..
எங்கும் பரவும் இயற்கை இசை ...
சத்தமற்ற ரயில் பயணம் ...
நெரிசல் நேர வேகவாகனப்பயணம்....
நெகிழ வைக்கும் திறப்படங்கள் ...
ஆயுளை கூடும் நகை சுவை ...
சிலிக்க வைக்கும் பாடல்கள் ...
விழி விருந்துதரும் நடனங்கள் ...
ஓடும் நீரில் காகித கப்பல் ..
வீசும் காற்றில் பறக்கும் பட்டம் ...
நான்கு சுவருக்குள் விளையாடும்
துடுப்பாட்டம் ...
கண் மயக்கும் காவியங்கள் ...
காதல் கூறும் கதைகள் ..
கண்கள் சொல்லும் கவிதை ...
உணர்வை உருக்கும் ஓவியம் ...
என்னை ரசிக்கும் நான் ....!!!
Sunday, 27 October 2013
கண்ணீர் சிந்தும் நேரங்களில...
விளையாடும் குழந்தை
அடிபட்டதும் அம்மாவை
அழைப்பது போல்
கண்ணீர் சிந்தும் நேரங்களில்
அனிச்சையாய் உன்னையே
தேடுகிறேன் நான்...
Friday, 25 October 2013
உனக்காய் இழக்கிறேன் உன்னையும்.....! !
இனி இழப்பதற்க்கு ஒன்றும்
இல்லை என்னை இழந்தேன்
இதோ இன்று உன்னையும் இழந்துவிட்டேன்.
...!!
வாழ் நாள் முழுதும் வருத்தப்பட உன்
அன்பு இருக்கிறது போதும் இது போதும்
எனக்கு.....!!
நீ விலகிப் போகிறாய் உன் கரம் பற்றி நான்
கதரிடவே நினைக்கிறேன்... .!!
உனக்காய் இழக்கிறேன் உன்னையும்.....! !
எல்லாம்
கடந்து போகுமென்கிறார்க ள்...?? கடந்து போக
நீ என்ன
ஆற்று நீரா.. ???
என் உயிரின் துடிப்பு..... நீ கடந்து போனால்
நான் வாழ்வது எப்படி?......
நீ மடிந்து போ என்றாலும் நான் மனதார
போகிறேன்....
*என்னை இல்லை என் அன்பை உண்மையென
ஏற்றுக் கொள்..... *
கண்ணீருக்கு காரணம்...
உன் கண்ணீருக்கு
காரணம்
நானாயிருக்க கூடாது...
உன் கண்ணில்
நீர் வருமென்றால்...
அன்று
நானேயிருக்க கூடாது
Wednesday, 23 October 2013
புரியவைத்து விட்டாய் வாழ்வு பொய் என்று!!
புரியவில்லை அன்பே... நீ நடத்தும்
நாடகங்கள்
ஒவ்வொன்றும் !!!
மறந்து விட்டேன் உன்னை.....!! என்று தான்
சொல்ல
நினைக்கிறன் ????
ஆனால் சொல்லி முடிக்கும் மறுகணம்
நினைவில்
நீ..!!!
பிரிந்து விட்ட பின்னும் உன் பெயர்
படித்தால் உள்ளம்
புல்லரிப்பது என்னவோ உண்மை தான்
அன்பே..!!
இந்த முறை உன் பிரிவு என்னை ஸ்தம்பிக்க
செய்யவில்லை.. காரணம் நீ என்னுள்
விட்டு சென்ற ரணங்கள்..!!!..
போகும் போக்கில் புரியவைத்து விட்டாய்
வாழ்வு பொய் என்று!!
Sunday, 20 October 2013
நீ விலகிச் செல்வதால் !
ஒரு முறை நேரில் பார்த்த
உன்னை காலமெல்லாம்
என்னருகில் பார்க்க ஆசை !
நிறைவேறாது என்ற ஒன்றை
நிறைவேற்ற துடிக்குது மனம் !
துடிக்கும் மனம் ஏனோ இன்று
துடிப்பிழக்கிறது என்னை விட்டு
நீ விலகிச் செல்வதால் !
நேற்றே நான் இறந்து விட்டேன்...
சற்றே வியந்துதான் போகிறேன்
உன் மனதின் நிறம் மாறும்
குணத்தை எண்ணி....
அளவில்லா ப்ரியங்களுடன்
அணுஅணுவாய் என்னை காதலிக்க
முடிந்த உன்னால் எப்படி இன்னொரு
இதயத்தையும் காதலிக்க
முடிந்தது?
நேற்று விளையாட்டாய் உன்
கைப்பேசியை
எடுத்துப் பார்க்கையில்தான் என் மனம்
தற்கொலை செய்துகொண்டது.
எனக்கு மட்டுமே சொந்தமான
உன் Sent items' ல்
யாரோ ஒருவருக்கு
நீ அனுப்பிய ஐலவ்யூக்களும்,
உம்மாக்களும்
என்னுள் ஏற்படுத்திய வலியை
உன்னால் உணரக்கூடுமா?
என் குரல்
சேமித்து வைக்கப்பட்டிருந்த
உன் ரெக்கார்டிங்கில் இப்போது
இன்னொருவர் குரல்...
உன் தொலைபேசியில் இருந்த என்
அத்தனை புகைப்படங்களும்
எங்கே போயிற்று?
உன்னால் பதில் சொல்ல
முடிகிறதா?
என் முன்னாலே நீ உன்
புதுக்காதலுடன்
சிரித்து பேசுகையில்
நொடிக்கொருமுறை
உன் காதலின் நினைவுகளால்
கற்பழிக்கப்படுகிறேன்.
இறைவா என் எதிரிக்கும் வேண்டாம்
இப்படி ஒரு வேதனை.
எனக்கு நிச்சயமாய் தெரிகிறது
உன் ஸ்பரிசங்களும், உன் முத்தங்களும்
இனி இன்னொருவருக்கு தான்
சொந்தம் என்று...
மூளைக்கு புரியும் இந்த
உண்மையை
மனம் அடம்பிடித்து ஒப்புக்கொள்ள
மறுக்கிறது.
உன் வாசம் படிந்த கைக்குட்டை..
உன்னுடன் கண்டு களித்த
சினிமா டிக்கெட்..
ஓயாமல் சிரிக்கும் உன் புகைப்படம்..
காதலுடன் நீ வரைந்த கிரீட்டிங் கார்ட்
என உன்னை மட்டுமே நினைத்துக்
கொண்டே
இருக்க வேண்டும் என நான்
பத்திரப்படுத்திய
உன் நினைவுகள் அனைத்தும் வெறும்
நினைவுச் சின்னங்களாக
மட்டுமே இருக்கும் என
சத்தியமாய் நினைக்கவில்லை...
என் வசந்த காலத்தின்
ஒரு பக்கத்தை முற்றிலும்
இலையுதிர் காலமாய் செய்தாய்.
மனம் வலிக்கும் நேரங்களில்
உன் நினைவுகள் மட்டுமே சுகமாய்
இருக்கும்.
ஆனால் இன்றோ என் மனவலிக்கு
முழுமுதற் காரணமும் நீயாய்...
அழுவது அவமானச் சின்னம்
என்பது என் கொள்கை.
ஆனால் இன்றோ என் கண்ணீர்
சுரப்பிகள் கூட வற்றிவிட்டன.
தற்கொலை செய்துகொள்வது
கோழைத்தனத்தின் உச்சம் என
நினைத்திருந்தேன்.
கண் முன்னே இப்படி ஒரு வலியை
உணர்கையில்தான் தோன்றுகிறது
தற்கொலை பாலைவனத்தில்
நீரைப்போல்...
உன் மனதின் கொடூரத்தை தாங்க
இயலாமல்
ஒரு நொடியில் மணிக்கட்டை
கூரிய பிளேடால் அறுத்துக்
கொண்டேன்.
நீ கொடுத்த வலியைவிட
அது ஒன்றும்
வேதனை நிறைந்ததாய்
இருக்கவில்லை.
என் காதல்
நரம்புகளை அறுத்துவிட்டு,
நீ வீணை வாசிக்கிறாய்.
என் சந்தோஷ சிறகுகளுக்கு தீ
வைத்துவிட்டு,
நீ குளிர்காய்கிறாய்.
யாரை நோக்கியோ உன் பார்வைகள்.
குருடாய் போனது என் உலகம்.
யார் பெயரையோ உச்சரிக்க
தயாராய் உன் இதழ்கள்,
ஊமையாகிப் போனது என் தேசம்.
என் SMS
சேமித்து வைத்திருப்பாய்.
எதற்கு என்று கேட்டால்,
உன் நினைவுகள் வரும் போது
எடுத்து படித்து கொள்ள என்பாய்...
இப்போது உன் Outbox' ல் கூட என் SMS
இல்லை.
ஏன் இப்போதெல்லாம் என் நியாபகம்
உனக்கு வருவதில்லையா?
நான் அனுப்பிய
சில காதல் மெசேஜ்களையும்,
படங்களையும்
சேமித்து வைத்திருந்தாய்.
சில நொடிகள் சந்தோஷப்பட்டது என்
மனம்.
பிறகுதான் தெரிந்து கொண்டேன்
யாரோ ஒருவருக்கு Forward செய்ய
அதை
எல்லாம் நீ பத்திரப்படுத்தி
வைத்திருக்கிறாய் என்று..
"மனம் மரணமடைந்தது" என்ற
ஷெல்லியின்
வார்த்தையை அனுபவித்து உணர்ந்தேன்
அன்று..
வாழ்ந்துகாட்டு! வாழ்ந்துகாட்டு
என்று என் உறவுகள் எனக்கு
ஆறுதல் சொல்கின்றனர்.
இனி நான் எத்தனை கோடிகள்
சம்பாதித்தாலும்
நீ எனக்கு கொடுத்த அந்த காதலை
என்னால் சம்பாதிக்க முடியுமா?
என்னதான் நான் பென்ஸ் காரிலே வந்து
உன் முன்னால் இறங்கினாலும்
உன் துணையுடன் உன்னை பார்க்க
நேர்கையில்
என்னால் சிரிக்க முடியுமா?
வேறு யாரை நான்
கட்டி அணைத்தாலும்
அந்த அணைப்பில் உன் வெப்பத்தை
என்னால் மறந்துவிட முடியுமா?
எத்தனையோ அழகான கவிதைகளை
என்னை எழுத தூண்டியது நீதான்.
இன்று துயரங்களையும் சுமக்கும்
பக்குவத்தை
எனக்கு தந்து இப்படியும் கவிதைகள்
எழுதலாம்
என புதிய அனுபவத்தையும்
எனக்கு கற்று தந்தாய்.
உனக்கு நன்றி.
என் பெயர் சொல்லி அழைக்க மறந்து,
யாரோ ஒருவர் பெயரை சொல்லி நீ
அழைத்தாய்,
அந்த ஒரு நொடியில் லேசாய்
உதடு கடித்து
ஒற்றை வார்த்தையில் "சாரி" என்று
சொல்லிவிட்டு போய் விட்டாய்.
நேற்றே நான் இறந்து விட்டேன்...
Saturday, 19 October 2013
காதலிக்க ஆசை...
காதலிக்க ஆசை தான் இறந்து போன
என் இறந்த காலத்திற்கும்
தொலைந்து போன என்
சந்தோசங்களுக்கும்
துடித்து கொண்டிருக்கும் என்
நிகழ் காலத்திற்கும்
சேர்த்து என்னை போல்
என்னை நேசிக்க ஒருவர் கிடைத்தால்
காதலிக்க ஆசைதான் எதிர்
காலத்தை...
Wednesday, 16 October 2013
En uyire...
நான் திருடியது உன் வார்த்தையை
நீ
திருடியது எனது இதயத்தை எனது இத
வார்த்தை இன்றி கூட வாழலாம்
நீ வைத்திருக்கும் என் இதயம் இன்றி நான்
எப்படி வாழ
இதயமின்றி துடிக்கிறேன்
உனக்காக.......
Monday, 14 October 2013
Naam sirithaal deepawali...
அடடா.. இந்த
தீபாவளி வந்துவிட்டாலே
எவ்வளவு பரவசம் ஊரிலும் நம்மிலும் !
துணிக்கடைகள்.. பட்டாசுக்கடைகள்..
பலகாரக் கடைகள் என்று
விதவிதமாய் வீதியெங்கும்
நிறைந்திருக்கும் கடைகளும்
மக்களும் !
காத்திருப்பது சுகமானது
காதலுக்கு மட்டுமல்ல
பண்டிகைக்கும்தான் !
எதிர்பார்த்து எதிர்பார்த்து
அந்த நாளின் முந்தைய இரவில்
கூட்டாளிகளோடு சேர்ந்து
விடிய விடிய கடைத்தெருக்களை
ஒரு கலக்கு கலக்கிவிட்டு..
தீபாவளி விடியற்காலையில்
வீட்டுக்கு வந்து..
முதல் வெடி போட்டு
ஊரை எழுப்பிவிட்டு..
எண்ணெய் வைத்துக் குளித்து..
புத்தாடை உடுத்தி..
அம்மா செய்த அத்தனை பலகாரங்களையும்
ஒரு பிடி பிடித்து..
இடைவிடாது ஒரு மணிநேரத்திற்கு
வெடி வெடித்து..
மெல்ல நண்பர் கூட்டம் நோக்கி
நடை போடும் கால்கள் !
அனைவரும் ஒன்றாய் சேர்ந்து..
அவனவன்
புது உடை பற்றி கிண்டலடித்து..
பலகாரங்கள் பண்டமாற்றம்
செய்து ருசித்து..
எந்தெந்த வீட்டுப் பெண்கள்
என்னென்ன
புத்தாடை அணிந்திருக்கக்கூடும்
என்பதை தெரிந்துகொள்ளவும்
கிண்டல் செய்யவும்
மெதுவாய் தொடங்கும் நகர்வலம் !
பலபேர் அவனவன் ஆள் வீடு முன் கூடி
ஜாடை பேசி ரகளை கட்டி..
சேலை கட்டத் தெரியாமல்
கட்டி நிற்கும்
சுடிதார்
சுந்தரிகளை வம்பிழுத்து..
தொடரும் ஊர்வலம் !
அது என்ன மாயமோ தெரியவில்லை
பண்டிகை தினங்களில் எல்லாம்
இன்னும் அழகாகிவிடுகிறார்கள்
நம் பெண்கள் !
பின்.. இருக்கும் வெடிகள்
வெடித்தது போதாதென
சின்னப் பையன்களின் வெடிகள்
பிடுங்கி
வெடித்துக் கிளப்பி வீடுபோய்
சேருவோம்..
மாலை வந்ததும் மறுபடி கூடும்
நண்பர்கள்.. நகர்வலம்..
வீதியையே ரெண்டாக்கிவிட்டு
வீடுபோய் சேருவோம்
ஆடித் திரிந்த அலுப்புடனும்..
பண்டிகை முடிந்த களைப்புடனும் !
அன்று முழுக்க
பட்டாசு சத்தங்களையும்
மத்தாப்பு வெளிச்சங்களையும் போல..
சிரிப்பும் சந்தோஷமும் மட்டுமே
நிறைந்திருக்கும் எங்கள் மனதில் !
Sunday, 13 October 2013
En vethanai...
மன்னிக்க கற்றுக்கொடுத்த
உன்னால் எப்படி மறக்க
கற்றுத்தர முடியவில்லை...
விளைவு!!!!!!!!!
விரும்பாத உன்னால்
விதையாகி விழுந்து
மரமாக என் சோகங்கள்...
விருப்பமில்லை என்றால்
விட்டிருப்பேன் எந்தன்
வேதனையில் குளிர்காய
விட்டிருக்கமாட்டேன்.
தானாக வந்து
தனிமையை தந்துவிட்டு
முக்கோண காதலால்
முதுகெலும்பை
உடைத்துவிட்டு
உண்ர்வில்லா உருவமாய்
ஆக்கிச்சென்றாய்...
மன்னித்துவிட்டேன்
ஆனாலும் மறக்க முடியவில்லை.......
Saturday, 12 October 2013
Friday, 11 October 2013
Unmai...
நெடு நாட்கள் பின் காண
நேரிடும் முன்னாள்
காதலனை -பேச
நிகழுமொரு சந்தர்ப்பம்தனை ...
விரல்களை பிசைந்தோ
கைப்பையை துழாவியோ
அசௌகர்யத்தை உணர்த்த ...
அவனும் உணர்ந்து
அவளைகடக்கிறான்
ஓர் வழிப்போக்கனாய் ...
தூரம் கடந்த பின்
திரும்பி பார்த்து
நலம் விசாரிக்கிறது
அவர்கள் பார்வைகள்
ஏனோ ஏக்கமாய் ...
மறக்கப்பட்ட காதல்கள்
ஜீவித்துக் கொண்டுதான்
இருக்கின்றன இன்னொருவனை
மணக்கும்போதும் ...
காதலனையே மணந்துபின்
காலம் கொடுத்த
உண்மைகளை -வலிய
மறுக்கப்பட்டபோதிலும் ...
திணிக்கப்பட்ட
யதார்த்தங்கள்
கசந்து உமிழத்
தொடங்குகின்றன ...
கழட்டி எறியப்பட்ட
அவர்களின் முகமூடிகளில்
மிச்சமிருந்த காதல்களும்
மரணித்துக் கொண்டிருக்கின்றன ...
Octobet18
Varukira oct 18 en piranthathinam...valaithala nanbargalin vaalthukkalai ethir paarthu piriyamudan piriyan...
Con:+919566520975
Thursday, 10 October 2013
En swasam...
காதல் சொல்ல போகையில்
அவள் கண்களை பார்க்கும்
அந்த ஒரு நொடியில்
சொல்லபோன வார்த்தைகள்
எல்லாம் முடமாகி என்
மனதோடு மூடப்பட்டுவிடுகிறது...










