Wednesday 9 May 2012

நீ மட்டும் தனியாக....

நீயும் நானும்
கைகோர்த்து நடந்த
கடைத்தெருவோரம் இன்று
நீ மட்டும் தனியாக
நடப்பதை என்னால்
நேரடியாக பார்க்கா விட்டாலும்
மனக் கண்ணில் பார்த்து
மனதார வருந்த முடிகிறது
அருகிருந்து ஆறுதல் கூற
முடியாத வருத்தத்துடன்!

உனக்கு என் ஞாபகம் ....


தனிமைகள் துணையாகும்
துணிச்சல்கள் வலுவிழக்கும்

விருப்பங்கள் நிறைவேறும்
குழப்பங்கள் தொட மறுக்கும்

சுடும் தீயில் விழுந்தாலும்
ஒரு முறை தான் இறந்துடுவேன்

பெரும் நோயில் விழுந்துதான்
தினம் தினம் நான் சாகிறேன்

உயிர் போகும் வலிகள் எல்லாம்
உணர்ந்தது இல்லை
இதுவரை நான் .....

உன்னை பிரியும் நாள் பார்த்தால் தான்
கண்ணில் உயிர் வலி கசிகிறது .......

என்னில் நிலவரம் கலவரம்
எனக்கு நீ கிடைத்த ஒரு வரம்

வரங்களை வழியில் நான்
விட்டு செல்கிறேன்

எனக்கு நீ இருகிறாய்
உனக்கு என் ஞாபகம்

கனிவான நினைவோடு......!

அன்பின் ஆழத்தால்
ஆழ்மனதில் உண்டான
பிரிவின் வலிகளை
சற்றே பழகிட
தயார் செய்த என்
பிஞ்சு இதயத்தை
கவிதை என்ற அம்பை
கடுகதியில் தொடுத்து
உன் நினைவுகளின் பிடிக்குள்
சிக்கவைத்து என்
விழிகளை நனைக்கிறாய்
கவிதைகளின் காயத்தால்
கலங்கிய விழிகளுடன்
கண்மணியே உந்தன்
கனிவான நினைவோடு......!

அன்பு உள்ளங்களாய்!

அன்பே!
இத்தனை நாட்கள்
எம்மிடம் இருந்தது
என்ன உறவு?

இப்போ சில காலம்
எம்முள் வந்தது
என்ன உறவு?

நம் உறவின் நெருக்கம்
நாளுக்கு நாள்
நெருங்கியே செல்கிறது

மானசீக நம் உறவின்
மனங்களிடையே சிறு
மகிழ்ச்சிகள் பொங்குது

நினைக்காத மாற்றங்கள்
நிஜமாக நடக்கையில்
நெஞ்செல்லாம் ஆனந்தம்

சிறு சிறு சீண்டலில்
சிலிர்த்திடும் ஆனந்தம்
சிந்திக்கவே முடியவில்லை

நட்புக்குள் கூட மனங்கள்
நம்மை போல் இப்படியா?
நம்பமுடியவில்லை

ஆயிரம் இருக்கட்டும்
ஆயுளுக்கும் நாம் இருப்போம்
அன்பு உள்ளங்களாய்!

நீ அவற்றிற்கு சொந்தமில்லை!

சிறகிருக்கும் பறவை நான்
சிறகிழந்த பட்சியாய்
வட்டமிட்டு சுற்றிட
வழியிருந்தும் இல்லையாய்!

நீ கொட்டிவிட்ட வார்த்தைகளை
மாலையாய் கோர்க்கையில்
மறுநொடி வாடிடும்
மலராக நான் இங்கு!

வார்த்தைகளின் கடினங்கள்
செவிகளை ரணமாக்க
ஊமையின் மொழியிலே
உள்ளுக்குள் பேசுகிறேன்!

மௌனங்களை கூட இங்கே
மொழிபெயர்க்க உறவிருந்தும்
ஊமையாய் உள்ளமிங்கே
உள்ளுக்குள் கலங்கிறது!

கனவுகள் கலையவில்லை
கற்பனைகள் சிறவில்லை
உறவுகள் பிரியவில்லை
அத்தனைக்கும் காரணம்
நீ அவற்றிற்கு சொந்தமில்லை!

Thursday 3 May 2012














பிரிவு என்ற சொல்லை பொருளற்றதாகி விடுவோம்.....!!!!!!!!!

நீர்க்குமிழி போன்றதல்ல
நம் நட்பு
நொடியில் மறைவதர்க்கு!

பிறை நிலா போன்றதல்ல
நம் நட்பு
வளர்ந்து தெய்வதர்க்கு!

முழுமதி போன்றதல்ல
நம் நட்பு
மேகங்களால் கலந்கபடுவதர்க்கு!

பனித்துளி போன்றதல்ல
நம் நட்பு
காலையில் மறைவதர்க்கு!


சூரியன் போன்றதல்ல
நம் நட்பு
கடலில் மறைவதர்க்கு!

தோழி (ழா)

வார்த்தைகளால் விவரிக்க முடியாத
நம் களங்கமற்ற நட்பின் அகராதியில்

பிரிவு என்ற சொல்லை

பொருளற்றதாகி விடுவோம்.....!!!!!!!!!

Tuesday 1 May 2012

சொல்லக்கூடாத உண்மை…


சொல்லக்கூடாத உண்மை…
இந்தக் கவிதை சொல்லக்கூடாத ஒரு உண்மை.. பலர் சொல்லத் தயங்கிய உண்மை.. உண்மையில் சொல்லப் பட வேண்டிய உண்மை !
எந்த படைப்பாளியும் தொடுவதற்குத் தயங்குகிற திசை இது.. ஆனால் யாராவது ஒருவர் தொட்டாக வேண்டிய அவசியம் மிக்கதும் இதுதான் !
இதுவரை எனது கவிதைகளுக்கு நிறைய பெண் ரசிகைகள் இருக்கிறார்கள். இந்தக் கவிதைக்குப் பிறகு அப்படித் தொடர்ந்து இருப்பார்களா என்பது சந்தேகம்.. இருந்தால் சந்தோஷம் !
என் வார்த்தைகளில் எங்கேனும் முரட்டுத்தனம் தெரிந்தால் அதற்காய் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன், ஆண்மைத் திமிர் தெரிந்தால் மன்னிக்க வேண்டுகிறேன் !
இனி கவிதைக்குள்….
இனிய பெண் தோழிகளே.. நவயுக தேவதைகளே..
நகரும் அருவிகளே.. வளர்ந்த நிலாக்களே..
கொஞ்சம் பேச வேண்டி இருக்கிறது உங்களுடன்..
கார சாரமாய்..
இனி வருபவை உங்கள் அனைவரைப் பற்றியும் அல்ல..
உங்களில் சிலரைப் பற்றி !
ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழியை
நீங்கள் தப்பாய் புரிந்து கொண்டீர்கள் எனத்
தோன்றுகிறது எனக்கு !
இப்போதெல்லாம் ஆடை பாதி ஆள் மீதிஎன
நீங்கள் திரிவதைக் காண முடிகிறது !
இயற்கையின் படைப்பில்
அழகானவர்கள் நீங்கள் என்பதை
என்றும் மறுப்பதற்கில்லை..
ஆணினம் அனைத்தும் உங்கள் விழியசைவுகளில்
விழுந்து விடுவதும் உண்மை !
அப்படி இருக்க
அரைகுறை ஆடைகள் அணிவதன் மூலமும்
அங்கத்தின் பாகங்கள் அப்படியே தெரிய
வலம் வருவதன் மூலமும்
எதை உணர்த்த விரும்புகிறீர்கள் நீங்கள் ?
உங்கள் அழகை மெருகூட்டுவதற்காய் எனச் சொல்லி
எடைக் குறைப்பு செய்கிறீர்கள்..
அது உங்கள் தனிப்பட்ட விஷயம் !
ஆனால் உடைக் குறைப்பு செய்வது
தனிப்பட்ட விஷயம் இல்லையே !
சேலையின் அசவ்கர்யம் தவிர்க்க
நீங்கள் சுடிதாருக்கும், ஜீன்சுக்கும்
மாறியதை வரவேற்கலாம் !
அத்தோடு நில்லாமல்..
கை வைக்காத மேல் சட்டையின் கை இடுக்கு இடைவெளிகள்..
மேல் உள்ளாடை தெரிகின்ற சன்னமான குர்தாக்கள்..
கைகளைத் தூக்கினால் எடுப்பாய் இடுப்பு பிரதேசங்கள்
தெளிவாய்த் தெரிகின்ற டைட் ஷர்ட்டுகள்..
கீழ் உள்ளாடை தெரிகின்ற லோ வெஸ்ட் ஜீன்சுகள்..
இறுக்கிக் காட்டும் மார்புப் பகுதியில்
ஏடாகூடமான வார்த்தைகள் பதித்த டி ஷர்ட்டுகள்..
இப்படி உங்களை அங்குலம் அங்குலமாய்
அடுத்தவர்களுக்குக் காட்டுவதன் மூலம்
என்ன சொல்ல வருகிறீர்கள் ?
உடல் பிதுங்கி
அங்கங்கள் அங்கங்கே அப்படியே
அப்பட்டமாய் திமிறித் திணறி நிற்க
நீங்கள் அணியும் உடைகள்
உங்களுக்கு அப்படி என்னதான் தருகின்றன ?
உங்களின் ஜன்னல்களை
நீங்களே திறந்து வைத்து விட்டு
ஆண்களின் கண்களை மட்டும்
கதவடைக்கச் சொல்வதில் என்ன நியாயம் ?
அதற்காய் ஆண்கள் அத்தனை பேரையும்
நான் ராமனாக்கவில்லை !
உண்மையில் ராமனே சீதையை சந்தேகித்து
தீயில் இறங்கச் சொன்ன
சராசரி மனிதன்தானே !
இருந்தும் கடந்த சில வருடங்களாக
அதிகமாய் சமூகத்தை கெடுத்திருப்பவை
பாலியல் குற்றங்கள்தான் !
இவை எப்படி நிகழ்கின்றன ?
பத்து வயது சிறுமியை
பலாத்காரம் செய்கிற வன்மம்
எப்படி முளைத்தது ?
உண்மையில் ஊரெங்கும் உலவும்
உங்கள் தேகம் பிதுக்கும் உடைகள் காட்டும்
உடல்களின் இடைவெளிகள் கண்டுக் கண்டு
பழுதடைகிற நெஞ்சம்..
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில்
தனிமையின் சூழ்நிலையைப் பயன்படுத்திக்கொண்டு
ராட்சச விஷ்வரூபம் எடுத்து
மொத்தமாய் வரம்பு கடந்து
தன வன்மத்தைத் தீர்த்துக் கொள்கிறது !
அத்தனைக்கும் காரணம்
நீங்கள்தானென சொல்லவில்லை..
முக்கியக் காரணமாய் நீங்கள்….
அதற்காய் உங்களை
ஆடைக் கூண்டுகளுக்குள்
அடைந்து கிடக்கச் சொல்லவில்லை..
அநாகரீகமற்ற.. அடுத்தவர் கண்கள் கூசாத..
ஆண்கள் அவதிப்படாத ஆடைகளை..
முகத்தைத் தாண்டி மற்றதைப்
பார்க்கத் தூண்டாத நாகரீக உடைகளை..
நீங்கள் அணிவதால்
எந்த விதத்திலும் குறைந்து விடப் போவதில்லை..
அங்கம் காட்டவில்லை என்பதற்காய்
ஆண்களும் உங்களைப் பார்க்காமல் இருக்கப் போவதில்லை !
அதனால் உங்கள் உடைகளை உன்னதமாய் உடுத்தி
இனி வரும் சமூகத்தை
பாலியல் வக்கிரங்களில் இருந்து
கொஞ்சம் காப்பாற்ற உதவுங்கள்..
ஏன் எனில் என்றும் புனிதமானவர்கள் நீங்கள் !
எங்களுக்கு மிகவும் முக்கியமானவர்கள் நீங்கள் !
எங்களின் தலைமுறைகளைப் படைக்கப் போகிறவர்கள் நீங்கள் !
எங்களின் நேற்றும் இன்றும் நாளையும் நீங்கள் !!!
இது ஒரு ஆண் பெண்கள் மீது போடுகின்ற பழியும் அல்ல.. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி சாடுகின்ற இகழ்ச்சியும் அல்ல..
ஒரு நண்பன் தோழிகளுக்குக் கூறும் அன்பான அறிவுரை ! ஒரு கவிஞன் சொல்லத் தவித்த கசப்பான உண்மை ! ஒரு படைப்பாளி தன பெண் சமூகத்தை விழிப்படைய வைக்கச் செய்யும் சின்ன முயற்சி !
பலிக்கும் என்ற நம்பிக்கையோடும்..
பிரியமுடன்…
பிரியன்

வேலை இல்லாதவனின் பகல்....

நாகரீக பிச்சைகாரன்....
முப்பது நாட்களுக்குமான 
முழு தரிசனமாய் 
முதல் மாத சம்பளம் பெற்று 
அம்மாவுக்கு புடவை...
அப்பாவிற்கு வேஷ்டி சட்டை...
தங்கை விரும்பி அணியும் 
பச்சை நிற தாவணி....
தம்பி ஆசையாய் கேட்ட கைகடிகாரம்....
அனைத்தையும் வாங்கி கொண்டு ஊருக்கு பயண படுகையில் 
கூச்சமாகத்தான் இருக்கிறது...
நண்பனின் செருப்பை கேட்பதற்கு....
பிரியமுடன் பிரியன் ....

வேலை இல்லாதவனின் பகல்....

வேலை இல்லாதவனின் பகல்....
பரண் மீது படுத்துறங்கும்
புத்தக மூட்டைகள் என்னை 
கேலி செய்கிறது...
பெற்றவர்களும் பதறுகிறார்கள்....
பிறகென்ன....
இன்னும் எதனை வருடம் தான் சுமப்பார்கள் என்னையும்....
வேலைக்காக நடந்ததில் 
இருந்த ஒரு செருப்பும் அறுந்து போனது...
தபால்காரனும் நான் கேட்காமலேயே சொல்லி விடுகிறான்
லெட்டர் ஏதும் வரவில்லை என்று...
காத்திருப்பில் குறைந்தது நம்பிக்கை...
கூடியது வயது...
எதிர்படுபவர்களின் விசாரணை அம்புகளில் தினம் சிதைகிறது 
என் நம்பிக்கை...
விடியும்போதே விரக்தியும் விளித்து கொள்கிறது  ...
வீட்டில் அடைந்து கிடக்கும் 
பகல் பொழுதுகள்
பகையாகவே தோன்றுகிறது....
அத்தியாவசிய தேவைகளில் இனி 
உணவு,உடை,இருப்பிடம்,
இவற்றோடு வேலையையும் சேர்த்து கொள்ளுங்கள்....
பிரியமுடன் பிரியன்...

நீ...நீ....நீ.....

என் இரண்டாம் காதல் கடிதம்.....உங்கள் பார்வைக்கு....
நீ...நீ....நீ.....
கவிதை உற்பத்தி தளம் நீ...
பாதிப்பு இல்லாத புயல் நீ...
பனிமலை தந்த குளிர் நீ...
கண்டதும் கவரும் காந்தம் நீ....
என்றும் அழியாத காதல் நீ....
தினமும் கூடும் அழகு நீ...
என்னுள் புதைந்திருந்த காதலை தோண்டி வெளியே போட்டவள் நீ....
கண்கள் கொண்டு பார்வை பின்னி 
வலையை விரிப்பவள் நீ.....
சிரிப்பால் ஊசி வழியின்றி எனை மயங்க செய்தவள் நீ...
கருப்பு மின்னல் கூந்தல் கொண்டு 
தூண்டில் இட்டவள் நீ.....
பூஜை செய்யாத கடவுள் நீ...
கட்டணமில்லாத கனவு நீ...
சண்டை போடாத காதலி நீ....
நாளும் கேட்கும் பாடல் நீ....
என்னை மட்டும் மீட்டும் வீணை நீ...
நான் மட்டும் தீட்டும் ஓவியம் நீ...
என்னை கொள்ள மங்கள் வடிவில் வந்த கயவன் நீ....
உள்ளம் திருடி தலை குனிந்து செல்லும்
உலக திருடி நீ...
எந்த பிறவி எடுக்கும் போதும்
எனக்காய் வாழ துடிப்பவள் நீ...
கம்பன் மறந்த வார்த்தை நீ...
பாரதி துறந்த வெள்ளை ஆடை நீ..
இயேசு சுமக்காத சிலுவை நீ...
மாசு இல்லாத காற்று   நீ....
நான் எழுந்தது விழிக்கும் உருவம் நீ...
அழுதால் அணைக்கும் ஆறுதல் நீ..
என்னை அணுஅணுவாய் ரசிக்கும் ரசிகை நீ...
நேரம் காலம் ஏதும் இல்லாமல் இமைததும் என் கண்முன் வருபவள் நீ....
ராசி கோள்கள் ஏதுமின்றி பார்த்ததும் 
ஆசை வைத்தவள் நீ....
வானில் மாறும் நிறம் நீ...
மண்ணில் கலந்த உரம் நீ...
கரும்பின் இனிய சுவை நீ...
உறங்கும் வேலை இருள் நீ....
விடியலின் ஒளி நீ...
என் நெஞ்சம் கவிழ்த்த சதி நீ...
சப்த கூண்டில் வாழ்ந்த என்னை மௌன தனிமையில் அழைத்தவள் நீ...
மாப்பிள்ளை என உன் வீட்டி அறிமுகம் செய்ய துடிப்பவள் நீ...
எப்படி கவிதை எழுதுவதோ என்று அறியாத கலையை தந்தவள் நீ...
சொற்படி கேளாத நதி என்னை 
அணையை கட்டி தடுத்தவள் நீ...
மென்மையுள்ள  பெண்மை நீ...
காணும் காட்சி யாவும் நீ...
அண்மையில் வந்த பெருமை நீ...
பயிரிட தகுந்த விலை நிலம் நீ...
கையெழுத்து போட  சொன்னால் என்பெயர் எழுதி சிரிப்பவள் நீ...
பச்சை சமவெளி புல்வெளி நீ..
எச்சில் படாத செவ்விதழ் நீ...
என் மூச்சு oxigen நீ...
நஞ்சு இல்லாத வார்த்தை நீ...
நான் கெஞ்சி கேட்கும் முத்தம் நீ..
மஞ்சள் தரும் வாசம் நீ...
கைகோர்த்து ரேகை மாற்றி காதல் வரைபடம் வரைபவள் நீ...
பழமை ஆகாத அதிசயம் நீ...
அல்ல அல்ல குறையாத ஆனந்தம் நீ..
முடிவுரை இல்லாத முன்னுரை நீ...
அர்த்தம் உள்ள வாழ்க்கை நீ...
அன்பின் பள்ளி பாடம் நீ...
என் அன்னை தரும் பாசமும் நீ...
எங்கும் நீ...எதிலும் நீ...
என்னுள்ளேயும் நீ மட்டுமே ....
என் உயிரே....
பிரியமுடன் பிரியன்....

இதழ் திறவாயோ....

என் இனிய  நண்பர்கள் அனைவருக்கும் பிரியனின் பிரியமான வணக்கங்கள்....சிறு இடைவெளிக்கு பின் உங்கள் அனைவரையும் காண்பதில் மகிழ்ச்சி....இன்று நான் என் காதலிக்கு தந்த முதல் இரு கடிதங்களை உங்கள் முன் சமர்பிக்கிறேன்.....உங்கள் கருத்துக்களை எதிர்நோக்கி 
பிரியமுடன் பிரியன் 
என்னை முழுதாய் கொள்ளையடித்த
வினாடிகள் எதுவாய் இருக்குமென கடிகாரத்தை பார்த்து கேட்கிறேன் .....
உன்னை பார்த்தவுடன் வியர்வை சுரப்பிகளுக்கேல்லாம் ஏனோ 
வெட்கம் போயி விடுகிறது....
என்னுளே இவ்வளவு வெட்கமா என
நானே ஆச்சர்யம் கொள்ள வைக்கிறாய்....
என்னுயிர் எங்கே இருக்கிறது
என பல நாட்கள் தேடி இருக்கிறேன்...
அதை கண்டு பிடித்து தந்தவள் நீ.......
உன்னை பார்த்த பிறகு எனக்கு மிக மிக பிடித்தவை எல்லாம் 
இரண்டாம் இடத்தில்.... 
மனதில் ஒன்று வைத்து உதட்டில் ஒன்று பேசுவது கேள்வி பட்டிருக்கிறேன்....
அதை நிஜத்தில் காட்டினாய் நீ.....
சிந்தித்து சிந்தித்து உன்னை செலவளித்தாலும் விஸ்வரூபம் எடுத்து 
கொண்டே இருக்கிறாய் என் நெஞ்சில்....
கண்ணாடிக்கு முன்னே இரு நிமிடங்கள் 
அதிகமாய் நிற்க வைக்கிறாய் நீ....
நீ அருகில் இருந்தால் யுகன்களோ நிமிடங்களாக....
நீ பிரிந்தால் நிமிடங்களோ யுகங்களாக....
நீ வருவதற்கு முன்னும் வந்த பின்னும் நான் அதிகம் பேசுவதென்னவோ 
என் கடிகாரத்திடம் தான்...ஆயினும் ஏனோ என் மன ஓட்டதி 
புரிந்து கொள்வதே இல்லை...
தன ஓட்டத்திலேயே போகிறது....
எல்லோரும் சிரித்தால் நானும் சிரிக்கிறேன்...
எல்லோரும் மௌனமானாள் 
நானும் மௌனமானாள் 
நானும் மௌனமாகிறேன்...
என்னிடத்தில் நான் இல்லாத வினாடிகள் அவை வேறென்ன செய்ய....?
எல்லாவற்றையும் ரசிக்க வைக்கிறாய்....
நான் உண்ணும் உணவை தவிர...
தலைகீழாய் புத்தகம் வைத்து கொண்டு படித்து 
முடிக்கிற திறமையை தந்தவள் நீ....
t .v  பார்த்து கொண்டிருக்கிறேன்...என்னாவ்டுகிறது என்பது புரியாமல் 
உன் நினைவில் நான் இருந்து கொண்டு....
உன்னை யோசித்து கொண்டே இல்லாத நகத்தை கடிக்கிறேன்...
தானாய் சிக்கும பொது மற்றவர் நெற்றியை சுரிக்கினால் என் உதடை மடித்து சமாளிக்கிறேன்...
பல சமயம் நான் யாரென்று கில்லி பார்த்து பின் தான் உணர வேண்டி உள்ளது...
கண்மூடி யோசித்து யோசித்து 
உன் முகம் கொண்டு வர பார்கிறேன்....
நெஞ்சதிளிருக்கும் உன் முகம்
கண்ணிற்குள் வர மறுக்கிறது...
என் தனிமையை சேகரித்து வாய்த்த உன் நினைவுகளை கொண்டே இனிமையாக்குகிறாய்,,,,
உன்னை எப்படி கூப்பிடுவது எனயோசிது யோசித்து 
யோசித்து கொண்டே என் பெயரை மறக்கடிக்கிறாய்...
உன்னை பார்த்திருக்கும் நொடிகளில் நெஞ்சில் பூ பூக்க வைக்கிறாய்....
பட்டாம் பூசிகளை பறக்க விடுகிறாய் என் நெஞ்சில் ....
நீ பேசும் பொது என் 
தாய் மொழியை மறக்க வைக்கிறாய்....
தமிழில் இல்லாதம் வார்த்தைகளை தேடி
ஓட வைக்கிறாய்....
தூக்கத்தில் உன்னை உளறி விடுவேனோ என இப்போதெல்லாம் நான் 
உறங்குவதே இல்லை...
யாராவது உன் பெயரை உச்சரித்தாலே 
என் இடத்தைய துடிப்பு இரு மடங்காகிறது...
உன்னை மறக்க வலி என்ன 24 மணி நேரமும் 
யோசிக்கிறேன்....
அந்த 24 மணி நேரமும் உன்னையே நினைக்கிறேன் 
என்பதை மறந்து விட்டு...
என் பேனா முனைகூட உன் பெயருக்கு வலிக்க கூடாதென 
காற்றில் தான் உன்பெயரை எழுதி பார்கிறேன்....
நீ சின்ன சின்ன குறிப்பால் உன் மனதை உணர்த்திய வினாடிகள் தாம் 
எனக்கு பெரிய பெரிய பாதிப்பை தந்திருக்கிறது...
யுகங்கள் பல கழிந்து பாதிக்க பட்ட எனக்கே இப்படியெனில் 
பாதிப்பை ஏற்படுத்திய உனக்கு....
ஆனாலும் பாவம் நீ
நான் கேட்டேனா இவற்றையெல்லாம் உன்னிடம்....
இப்படி அவஸ்தைகளை தருவாய் என்றும் எனை உயிரோடு கொள்வாய் என்றும் தெரிந்திருந்தால் 
உன்னுடனான சந்திப்புகளை தவிர்த்திருப்பேன்....யோசிக்கிறேன்
தவிர்க்க முடியுமாவென்று என்னுள்ளே
ஒரு கேள்வி கேட்டால் நிச்சயம் 
முடியாதென்று சத்தியம் செய்கிறது   
உள்ளே இருக்கும் என் மனம் ...
இறுதியாய் ஒரு உண்மையை சொல்கிறேன் 
இந்த அவஸ்தைகளும் எனக்கு பிடித்து தான் இருக்கிறது...
ஓர் உயருக்குள் இன்னோர்
உயிரை அடைத்து வைத்திருக்கும் சுகமான அவஸ்தை...
இந்த அவச்தைஎல்லாம் உனக்கும என நான் இதயத்தால் கேட்டால் நீ கண்களால் ஆம் என்கிறாய்...
உன் மௌனம் எனக்கு மிக பிடிக்கும் என்பதால் உன் மௌனத்தாலேயே எனை கொல்லாதே....
இதை திறந்து பதில் சொல்....
காத்திருக்கிறேன் அந்த மூன்று வார்த்தைக்காக.....
பிரியமுடன் பிரியன் ...