Tuesday 18 March 2014

பேரூந்து நிறுத்தத்தில் தவம் கிடக்கிறேன்

தோழியை செல்லமாய்
அழைத்தபடி பவ்வியமாக
என்னை கடந்துசெல்கையில்
தலை தாழ்த்திய
ஓரப் பார்வையாலும்
சிவந்த இதழ்களின்
சிறு புன்னகையாலும்
மலர் முகத்தின்
வெட்கத்தாலும் என்
ஆயுளின் நாழிகைகள்
நித்தமும்
புத்துயிர்பெற
நீ
கல்லூரி சென்றுவரும்
பேரூந்து நிறுத்தத்தில்

தவம் கிடக்கிறேன்

மௌனங்கள் மட்டுமே உன் பதிலாக இருக்கும்

காதலிப்பாய்
அந்த காதல் ஒருநாள் ஆழமான
காதலாய் மாறும் முன்பு
பிடிதவர்கள் எல்லோரும் இன்று
பிடிக்காமல் போவார்கள் இப்ப வந்த
இந்த
தேவதையை மட்டுமே உனக்கு பிடிக்கு
நாட்கள் போக போக இன்னும் பாசம்
கொள்வாய்
பகல் இரவு பார்க்காமல்
பேசிக்கொண்டே
இருப்பாய் பேச வார்தைகள் இல்லாத
போது
சண்டைகள் ஆரம்பமாகும்
சண்டைக்கு பின்
சேரும்போது இன்னும் உன் பாசம்
கூடும்
திருமணம்
ஆகமலே பாதி மனைவியாய்
நினைத்து பாசம் கொள்வாய் ஒண்ணு
சேராமலே ஓரிரு குழந்தையையும்
பெற்று கொள்வாய் அதற்க்கு உன்
பெயரினில் பாதியும் உன்னவளின்
பெயரினில் பாதியும் எடுத்து
ஒரு அழகான பெயரை பிறக்காத
குழந்தைக்கு
பெயர் சூட்டுவாய் ..காலையிலும்
மாலையுலும் நீ பேசும் நேரங்களில்
அந்த குழந்தையின் பெயரை சொல்லி
உன்னவளிடம் நலம் விசாரிபாய்
காலமும் காதலும்
ஓடிக்கொண்டே இருக்கும்
காதலியிடம் பேச வேண்டும்
என்பதற்காக
பாலமணி நேரம் செய்யவேண்டிய
வேலையை
சில மணி நேரங்களில்
செய்து முடிப்பாய்
கண்ணாடியை பார்த்து பார்த்தே உன்
பிம்பம்
கண்ணாடியிலே பதிந்துவிடும்
இணையத்தில்
வந்தால் காதல்
பாடல்களையே தேடி தேடி பார்ப்பாய்
என்நேரங்களிலும் உன்
தொலைபேசியில்
இருப்புதொகை இருந்துகொண்டே இர
அவளில் அழைப்பிற்க்க்காக
காத்துக்கொண்டிருபாய்
அழைப்பு வந்ததும் உன் காது சுடும்
வரை
விடாமல் பேசிக்கொண்டே இருப்பாய்
பேட்டரி லோ என்று வந்ததும்
எரிச்சலடைவாய் சில
வருடங்களுக்கு பின் இவள்லின்றி நீ
இல்லை என்ற காலம் ஒரு நாள் வரும்
அப்போது
இன்னும் அதிகமான பாசம் வைப்பாய்
உன்னவள் யார்கூட பேசினாலும்
கோபமடைவாய்
உன்னவள் உன்கூட
மட்டுமே பேசவேண்டும்
என்று உத்தரவிடுவாய்
(இது உனக்கே தெரியும்
தப்பென்று )இருந்தாலும்
அவள் மீது உள்ள அளவுக்கு அதிகமான
பாசம்
உன் கண்ணையே மறைத்து விடும்
இன்று
தொடங்கும் உன்னவளுக்கு உன்மீதான
வெறுப்பு
நீ வைத்த பாசம் எல்லாமே அவளின்
கண்களை
மறைத்துவிடும் பேசக்கூடாத கடும்
சொற்களால்
பேசுவாள் உன் மனதை வலிக்க
செய்யும்
உன்னைபோல் ஒரு சந்தேகம்
பிடிச்சவனை
இதுவரை பார்ததில்லை என்பாள் பல
வருடம் சிறுக சிறுக
சேகரித்து கட்டின
காதல் தாஜ்மஹாளை ஒரு சில
நிமிடங்க்ளில்
உடைத்தெறிவாள் ,மனசுக்கு பிடித்தவ
திட்ட மனம்வராமல்
மௌனங்கள்
மட்டுமே
உன் பதிலாக இருக்கும் இனி என்
மூஞ்சிலே
முழிக்காதே என்பாள் உன் எதிரிகளை

தேடி தேடி போய் பேசு

வைர முத்துவை தோற்கடிக்க வேண்டும் .....

வலிகளே வாழ்கையானதோ ?
அன்பே ! நிரந்தரம் உன் பிரிவு என்றால்
இன்றே மரிப்பேன் என் உயிரை !
விழிகளோரம் உன் நினைவுகள் கண்ணீராக !
விதி மட்டும் ஏங்குதடி உன்னையும்
என்னையும் சேர்க்க !

கண்ணில்லாத இந்த காதல்
என் கண்ணீர்க்கு மட்டும் சொந்தமானதேனோ !
உண்மையோடு பிறந்த இந்த காதல்
இன்று நடு வழியில் ஊனமாக !
என் வலியின் ஆழத்தை நான் அவளுக்கு
இதுவரை உணர்த்தவில்லை !
தாங்க மாட்டாள் அந்த பிஞ்சு இதயத்துக்கு
சொந்தக்காரி !

காதலித்து திருமணம் செய்து கொண்ட
அவளது பெற்றோர்களே ! உங்களுக்கு தெரியாதா ?
அளவிட முடியாத அந்த வலியின் ஆழம் !
மனம் முழுவதும் மணம் வீசிய என் ரோஜா
இன்று தனி அறையில் தனி மரமாக !
காரணம் இல்லாமல் பிரிக்க துடிக்கும்
உன் பெற்றோர் !

கண்ணீர் மட்டும் போதாதடி !
உன் நினைவுகளை அழிக்க !
என்னவளே எனக்கு இன்னும் கொஞ்சம் வலிகொடு
நான் வலிகளை எழுதுவதில்
வைர முத்துவை தோற்கடிக்க வேண்டும் .....