Friday 15 August 2014

அம்மா ....

எனக்கொரு ஆசை..,
மீண்டும்
என் முதல் உலகிற்கு செல்ல...
நீர் சூழ்ந்த உலகம் அது..,
காற்று என்பதே கிடையாது , இருள்
நிறைந்த உலகம் அது ,
பயம் என்பதே கிடையாது..
அங்கே இருட்டில் இருந்தும்
எப்போதும் வாழ்கை வெளிச்சமாய்
இருந்தது..
கிட்டதட்ட
அது ஒரு
தனிக்குடித்தனம்..
ஆனாலும் தனியாக இல்லை..
உணவு இடம் பாசம்
என அனைத்தும் கிடைக்கும்
விருந்தோம்பல் அங்கே ..
வேலை என்பதே கிடையாது ,
ஆனாலும் ஒரே வேலை தூக்கம்..
சில நேர விழிப்பில் ,
தூக்கத்திற்கு ஓய்வு..
மனதில் சிறிதும்
கோபம் இல்லை ,
சோகம் இல்லை ,
துன்பம் இல்லை,
காதல் இல்லை ,
காமம் இல்லை..
இரவின் நிலவு போல,
அங்கு துணையாக யாரும் இல்லை ,
தனிமையை தவிர..
ஆனாலும் அங்கேயும் ,
நிலவை தாங்கும் வானம் போல
எனையும் தாங்க,
எனக்காக சுவாசிக்க , எனக்காக
உண்ண ,
என்னையே எப்போதும் நினைக்க
எனக்காகவே இருக்க
ஒரு ஜீவன்..
என் தாய் ..
ஆம்..!
எனக்கொரு ஆசை
மீண்டும் என் முதல்
உலகிற்கு செல்ல.....