Sunday 29 December 2013

karu maariyavargalin kanneer...

கட்டாயம் வாசியுங்கள்
கருமாறி பிறந்தவர்கள்
கவலையிது
*
வருடத்திற்கோர் தாலி
எம் கழுத்தில்
ஒருவனே சொந்தம் எமக்கு
இன்நாளில் !!!!!!
இருந்தும் இராத்திரிகளுக்கு
சொந்தமில்லை நம்முடல்!!!!
ஏனோ தாலிகள் மட்டும்
தவறுவதில்லை
வருடத்தில் ஓர்முறை....
காய்கின்ற இழைகள்
கணநேரம் இருக்கவில்லை
எம் கழுத்தில்!!!!!
கட்டியவன் கைகளே
வெட்டிவிடுகின்றன
அவைகளை.....
இருந்தும் விதவைகள்
ஆகவில்லை நாம்...
எமக்கோர் அற்புதவாழ்வு
இருந்தும் அவசரத்திற்க்கு
ஒதுங்க அவனியில்
இடமுமில்லை
அரசாங்கம் ஒதுக்கவுமில்லை...
எம்முடல்கள் சிவன்பாதி
உமைபாதி......
பிரம்மன் ஏனோ
பித்தனாகிவிட்டானோ!!!!!!!
பிதா செய்ததவறால்
பிழையாய் பிறந்தோமோ!!!!
விடைகாணா விசித்திரம்
நாங்கள்.....
நாமென்ன பிழைசெய்தோம்!!!
நமக்கு
நாவிருந்தும் பயனில்லை...
கூத்தாண்டவா கூத்துக்கள்
வேண்டாமென்று கூறு
சிவவிஷ்ணுவிற்க்கு...
தாலிகள் நிலைக்கவேண்டாம்
எமக்கு
தரணியில் தன்மானம்
கிடைத்தால் போதும்...
தலைநிமிர்ந்து வாழ்வோம்
அர்ஜீனன் பரம்பரை
நாமென்று

Friday 27 December 2013

alagi thevai...

எனக்கு ஓர் அழகி தேவை.....
அனால்,
கருவண்டு கண்கள் தேவையில்லை,
குறும்பு பார்வை தேவையில்லை,
வில்லாய் வளைந்த புருவங்கள் தேவையில்லை,...
சிரித்து பேசும் உதடுகள் தேவையில்லை,
அணைக்கும் அழகு கரங்கள் தேவையில்லை,
அழிந்து போகும் வெளிப்புற அழகுகள் தேவையில்லை,
ஆயினும்,
எனக்கு ஓர் அழகி தேவை.....
கருணையான கண்கள் தேவை....
மென்மையான பார்வை தேவை....
மொழி கொண்ட புருவங்கள் தேவை...
அன்பு மொழி பேசும் உதடுகள் தேவை....
அரவணைக்கும் கரங்கள் தேவை....
மாறாத அன்பு மனம் தேவை....
மொத்தத்தில், இதயத்தால் அழகைக்கொண்ட,
அழகியே நீயே, என் வாழ்கை துனைவியாய்..... தேவை

Published with Blogger-droid v2.0.10

alagi thevai...

எனக்கு ஓர் அழகி தேவை.....
அனால்,
கருவண்டு கண்கள் தேவையில்லை,
குறும்பு பார்வை தேவையில்லை,
வில்லாய் வளைந்த புருவங்கள் தேவையில்லை,...
சிரித்து பேசும் உதடுகள் தேவையில்லை,
அணைக்கும் அழகு கரங்கள் தேவையில்லை,
அழிந்து போகும் வெளிப்புற அழகுகள் தேவையில்லை,
ஆயினும்,
எனக்கு ஓர் அழகி தேவை.....
கருணையான கண்கள் தேவை....
மென்மையான பார்வை தேவை....
மொழி கொண்ட புருவங்கள் தேவை...
அன்பு மொழி பேசும் உதடுகள் தேவை....
அரவணைக்கும் கரங்கள் தேவை....
மாறாத அன்பு மனம் தேவை....
மொத்தத்தில், இதயத்தால் அழகைக்கொண்ட,
அழகியே நீயே, என் வாழ்கை துனைவியாய்..... தேவை

Published with Blogger-droid v2.0.10

ivargalum poraligalthaan...

இவர்களும்
போராளிகள்தான்...!
ஆழ்ந்துறங்கும் சூரியன்
எழுந்திருக்கும் முன்
ஆயுதங்களோடு....
கொளுந்துக்
களத்திற்குச் செல்லும்
இவர்களும்
போராளிகள்தான்...!
ஒழிந்திருந்து
குளிர்க் குண்டு வீசி
உடல் துளைக்க முயலும்
பனி மூட்டங்களை
துப்பட்டாவால்
துரத்தியடிக்கும் இவர்களும்
போராளிகள்தான்...!
மலைச் சரிவுகளில்
தேயிலைத் தளிர்களில்
தன் சோற்றுப் பருக்கைகளைத்
தேடியலையும்
இவர்களும்
போராளிகள்தான்...!

Published with Blogger-droid v2.0.10

Sunday 15 December 2013

kallarai....

என் மரணத்தில்
உன் மலர் வளையம்
வந்தாலும்
மன்னிக்காது என் ,,,,
உயிர் ,,,
நீ பேசிய வார்த்தைகளை,,,
மறந்திடாதே ,,,

Published with Blogger-droid v2.0.10

ithalgal...

என் விட்டு பூக்களும் இலைகளும்
அவ்வப்போது உன் இதழ்களாக
மாறிகொள்கின்றன நான்
கொஞ்சிக்கொள்ள...

Published with Blogger-droid v2.0.10

Saturday 14 December 2013

penmaiyin vasanai suvai....

அன்றொருநாள்
என் வீட்டிற்கு நீ
வந்தபொழுது…
எனது அறையெங்கும்
நிரப்பிவிட்டுச் சென்றாய்
உன் வாசனையை…
வேறு யாராலும் உணரமுடியாத
அந்த அழுத்தமான ஆழமான
தீர்ந்து போகாத
வாசனையின் சுவையை…
ரசித்து ரசித்து
நாள்தோறும்
பருகிக்கொண்டே இருக்கிறேன்
என் மூச்சுக்கூட்டுக்குள்…
உன்னைப் பற்றிய நினைவுகளோடு
அந்த அறைக்குள்
நுழைகையில் எல்லாம்
என்னை தழுவிக்கொள்ளும்
அது மிருதுவாய்…
உன் பெண்மை கலந்த
அந்த சுக வாசனை
எங்கிருந்து புறப்படுகின்றது
என்பது மட்டும்
என்றும் ரகசியமாகவே
இருந்தது எனக்கு…
மற்றொருநாள்
மீண்டும் என் வீட்டிற்கு நீ
வந்த பொழுது…
உன்னிடம் மெல்ல கேட்டேன்
இந்த வாசனை புறப்படும்
ரகசிய இடம் எதுவென்று…
அந்த நொடிப்பொழுதில்
பிரகாசமாகி
பின் அமைதியாய் அருகில் வந்து…
என் இதயத்தில் கை வைத்து கூறினாய்
இதோ இங்கிருந்துதான் என்று…

Published with Blogger-droid v2.0.10

alagu...+919566520975

கடிகார முள்ளைப்போல்
ஒரு நொடிகூட நில்லாமல்
உன்னை எண்ணியே ஓடிக்கொண்டிருக்கும்
என் நினைவுக் குதிரைக்கு
பாசக் கடிவாளமிட்டு
அதன்மேல் ஒய்யாரமாய்
பயணம் செய்கிறாய்…
பள்ளத்தில் பாயும்
நதியின் சலசலப்பைப்போல்
ஓயாமல் எப்போதும்
எதையாவது பேசிக்கொண்டிருக்கும் நீ…
சட்டென சிலநாள்
பாசி படிந்த குளம்போல்
மௌனித்திடும் பொழுது
மரண பயம்கொண்டு
ஸ்தம்பித்து போகின்றன என் நாட்கள்…
புதிதாய் பொம்மை கிடைத்த
மகிழ்ச்சியில்
அதோடு ரசித்து ரசித்து விளையாடி
பின் மெல்ல மெல்ல ஆர்வம் குறைந்து
அதை ஓரமாய்
வைத்துவிட்டு ஓடிப்போகும்
குழந்தையின் மனநிலையில்
ஒருவேளை விழுந்துவிட்டாயோ என
நான்
அறிய முற்படுகையில்…
முரட்டு வார்த்தைகளால்
என்னை முறித்துப் போடுகிறாய்…
உன் சின்ன சின்ன வரிகள்
என்னை சீக்கிரம்
சாகடிக்கத் தொடங்கும் முன்…
வானமளவு நிறைந்து
பூமியையே பகிர்ந்து
பூக்களைப்போல் திறந்து
மற்றதெல்லாம் மறந்து
நாம் பேசிய பழகிய நாட்களில்
உனக்கு தெரியவில்லையா…
நான் வார்த்தைகளில் வாழ்பவன் என்று…

Published with Blogger-droid v2.0.10

Friday 6 December 2013

nee vendum...9566520975

அழுவதற்கு உன் மடி வேண்டும்.
அணைப்பதற்கு உன் கைகள் வேண்டும்.
அள்ள அள்ளக் குறையாத உன்
அன்பு வேண்டும்.
எல்லா வற்றையும் விட நீ
எனக்கு வேண்டும்.
உன் அன்புக்காய் ஏங்கும் எனக்கு
அனாதையில்லை என்று சொல்ல
நீ எனக்கு வேண்டும்.

Published with Blogger-droid v2.0.10

Thursday 5 December 2013

அன்பு நண்பர்களே... Typed with Panini Keypad

விதைகள் மட்டும்.பதியபட்ட எ�ன்  .வலைப்பதிவில் இனி நல்ல கதைகளையும் கண்டு. மகிழலாம்.....

Published with Blogger-droid v2.0.10

Monday 2 December 2013

kaakkum silakaigal...

"குத்தாது"
என்று நம்பும் சில கைகளே....
நம் கண்ணை குத்தி, காயப்படுத்தி
சந்தோசம் கொள்கிறது.....
உறவுகளாய்.... நட்புகளாய்....

Published with Blogger-droid v2.0.10

Saturday 30 November 2013

thanthu vidu....9566520975

என்னை தொலைத்து விட்டேன்..
ஆனால் நான் எனை தேடவில்லை..
நான் உன்னுள்ளே பத்திரமாக இருக்கிறேன்..
என் கவிதைகளை தொலைத்து விட்டேன்..
எனை திருடி சென்ற உன்னோடு என்
கவிதைகளை தொலைத்து விட்டேன்..
வந்து விடு..என் கவிதைகளை திருப்பி தந்து விடு...

Published with Blogger-droid v2.0.10

Sunday 24 November 2013

நினைவு ....

விக்கல்
விக்கல் எடுக்கிறது
தண்ணீர் குடிக்க மனமில்லை.
ஏனெனில் நினைப்பது நீயல்லவா..!!
ஆதலால்....
நிலைக்கட்டும் சில நிமிடங்கள்
இந்த விக்கல்...!!

Published with Blogger-droid v2.0.10

Friday 22 November 2013

மௌனம்9566520975

உலகில் எவராலும் புரிந்துகொள்ள முடியாத ஒரே மொழி மௌனம் . இந்த மௌனம் எத்தனை பேரை அழ வைத்திருக்கும். ..???

Published with Blogger-droid v2.0.10

Wednesday 20 November 2013

niranthara parisu...

நீ நிரந்தர பரிசாக எனக்கு
கொடுத்தது கண்ணீரை மட்டுமே.....!!!!

Published with Blogger-droid v2.0.10

swamiye saranam ayyappaa...

Published with Blogger-droid v2.0.10

Saturday 16 November 2013

niyapagam...

நான் நினைத்தவர்கள் என்னை
மறந்ததால் கவலைப்படவில்லை
என்னை மறந்தவர்களை என்னால்
மறக்க முடியவில்லையே என்று
கவலை படுகிறேன்....!!!!

Published with Blogger-droid v2.0.10

Thursday 14 November 2013

mutham...

எந்த காதலனும் தன்
காதலிக்கு முத்தம் கொடுக்காமல்
இருந்திருக்க வாய்ப்பில்லை.!
காதல் பிரிந்து கல்யா ணம்
முடிந்தாலும்.!
முதல் முத்தம் பெறுகையில் அந்த
பெண்ணின் நினைவில் முழுதும்
காதலனும் அவன் கொடுத்த முதல்
முத்தம் தான் நினைவில் ஓடும்.!
அந்த ஒரு நொடி போதும் என்னை போன்ற
காதலனுக்கு.!

Published with Blogger-droid v2.0.10

Monday 11 November 2013

nee illatha vaanam...

நீ
இல்லாத என் வானம்
விடிந்தும் விடியாமல் போன
மாயம் என்ன?
என் காதல் அன்று
கவிதை தந்தது...
இன்று கண்ணீர் தருகிறது
அன்று கவிதையை ரசிக்க நீயிருந்தாய்...
ஆனால் கண்ணீர் துடைக் நீ இல்லை
இது தான் என் காதலின் நிலையா??

Published with Blogger-droid v2.0.10

Saturday 9 November 2013

Unmai paartha naal mutual...

எதிர்பார உன் வருகை...மனதில் பதிந்த
உன் முகம்..மறக்க முடியா உன்
நினைவுகள்..நெருங்கி வரும்
தனிமை...வலிகள் சுமக்கும்
இதயம்...அனுபவிக்கின்றேன்
இவையெல்லாம்உன்னை பார்த்த
நொடி முதல்..

Published with Blogger-droid v2.0.10

பார்வை9566520975

நீ தினமும் பார்க்கும்
பார்வைக்கு என்ன அர்த்தம்
என்பதை அறிய- அகராதியுடன்
அலைகிறேன் அர்த்தத்தை தேடி...

Wednesday 6 November 2013

enakku pidithavai...

எனக்கு பிடித்தவை
உயிர் நண்பன் ..
வரம்பு மீறாத பெற்றோர் ...
காலைக்குளிர் ..
இரவு வெயில் ..
மாலை தளிர் ...
ஆவியாய் அலையும் நீர் ..
நீராய் மாறும் புகை ....
முத்தாய் மாறும் மழைத்துளி ..
ஆழ்நீரில் வெயிலில் காயும் மீன் ..
அங்கேயே குளிரில் நடுங்கும் நீர் குமிழி ..
காற்றில் கபடியாடும் பஞ்சு...!!!
கண்ணை ஏமாற்றும் பூப்பிறப்பு ..
விழிகளை கவரும் பூப்படைப்பு ...
சிரிக்கும் அமாவாசை நட்சத்திரம் ...
தூக்கில் தொங்கும் இலை நுனிமழைதுளி ..
ஓசையில்லாத காட்டில் குயில் ஓசை ...
இடம் பெயர்ந்து வரும் உதிர்ந்த இலைகள் ..
புது ஓவியம் படைக்கும் மரக்கிளைகள் ..
உணர்வை தூண்டும் செவ்வானம் ...
உருவம் மாறிய உறைபனி ...
உருகி காதலிக்கும் நீரும் மண்ணும் ...
உண்ண மறக்கும் வேரும் மரமும் ...
வெயில் கால மழை ...!!!
ஓடை ஓரத்தில் முளைத்த காளான் ..
ஒற்றையில் வாழும் ஒருவழி மண்பாதை ..
ஒருநாள் வாழும் உயிரிணம் ..
ஓசை எழுப்பாத இரவு வானம் ...
ஓட்டை வீட்டில் ஒழுகும் மழைநீர் ...
வான் கண்ணீர் மயிலாட்டம் ..
மழைநேர சுடும் தேநீர் ..
கண்களில் விழும் ஒற்றை மழைத்துளி ..
போர்வையை தேடும் குளிர் காலம் ...
மாயம் காட்டும் கடல் பெரு அலை ....
தலையில் விழும் முதல் மழைத்துளி
உரசிப்போகும் ஊடல் காற்று ....
விழிகை ஓயவைக்கும் இளங்காற்று ...
இன்னுமொருமுறை தூங்கா சொல்லும்
கருமேக வான் ....
ஒற்றைப்பாதை சைக்கிள் ஓட்டம் ..
உறங்கும்போது மெல்லிய பாடல் ...
தடக்கி விழுந்து சிரிக்கும் கனவு ...
கனவால் எழுந்து முழிக்கும் முழி ...
நவரத்தினத்தையும் தோற்கவைக்கும்
குழந்தை சிரிப்பு ...
ஒற்றை கிளை மரங்கள் ..
நிஜம் தேடும் உள்ளங்கள் ..
உதடுகள் விரியாத சிரிப்பு ...
ஒற்றைத்துளி கண்ணீர் ..
அலட்டல் இல்லாத அரட்டை ...
அசட்டை இல்லாத சேட்டை ...
அச்சம் இல்லாத அடிதடி ..
சலனம் இல்லாத உள்ளம் ...
சொர்க்கம் தோற்கும் தாய் மடி ..
அறிவுறை சொல்லும் தந்தை ...
சொல்லாமல் எற்படும் வலிகள் ....
சோகம் தணிக்கும் தோழன் தோள்கள் ...
கண்ணீர் துடைக்கும் தோழியின் விரல்கள் ...
நானாக கோபம் தணிக்கும் தருணம் ...
தனியாக சிரிக்க வைக்கும் நினைவுகள் ...
வியப்பாக சிரிக்க வைக்கும் நினைவுகள் ...
வியப்பை ஏற்படுத்தும் வெற்றிகள் ....
சற்றும் எதிர் பாராத இழப்புக்கள் ....
விட்டுக்கொடுத்த தோல்விகள் ....
விடை தெரிந்தும் எழுதாத வினாக்கள் ...
சோகத்தில் சிரிக்கும் உதடு ...
கண்ணீரில் மறையும் கண்கள் ...
விரும்பி ஏற்ற காயங்கள் .......
துன்ப நேர தனி சிறை ...
அளவில்லாத இயற்கை கற்பனை ....
மற்றவர் விரும்பும் சிறு சாகசங்கள் ....
மழைத்துளி வெட்டும் விரல்கள் .....
என்னை வெறுப்பவர்கள் ...
எதிர்பார்த்து நிற்கும் அடுத்த நிகழ்வு ...
ஏடறிவு தந்த ஆசிரியர் ..
குளிர் கால சூரிய உதயம் ..
வெயில் கால சந்திரா உதயம் ..
புற்கள் அணிந்த மலைசாயல் ...
மின்சாரம் இல்லாமல் ஒளிரும்
விண்மீண்கள் ...!!!
இருட்டில் ஓட்டை வழி சூரிய ஒளி ...
நதியில் வருகைதரும் இலைப்பயணம் ...
வர்ணம் சேர்க்கும் வண்ணாத்தி பூச்சி ...
காலையில் பனித்துளி நனைந்த தாமரை ...
நறுமணம் வீசும் மல்லிகை ...
முற்கள் நிறைந்த ரோஜா ...!!!
கூட்டாக உணவு உண்ணும் தேனீ கூட்டம் ...!!!
உயிர் நண்பன் ..
முதல் காதலி ..
வரம்பு மீறாத பெற்றோர் ...
காலைக்குளிர் ..
இரவு வெயில் ..
மாலை தளிர் ...
ஆவியாய் அலையும் நீர் ..
நீராய் மாறும் புகை ....
முத்தாய் மாறும் மழைத்துளி ..
ஆழ்நீரில் வெயிலில் காயும் மீன் ..
அங்கேயே குளிரில் நடுங்கும் நீர் குமிழி ..
காற்றில் கபடியாடும் பஞ்சு...!!!
எண்ணை தரும் சூரிய காந்தி ...
எண்ணிடும் நிமிடங்கள...
என்னை தோற்கவைக்கும் வர்ணங்கள் ..
எங்கும் பரவும் இயற்கை இசை ...
சத்தமற்ற ரயில் பயணம் ...
நெரிசல் நேர வேகவாகனப்பயணம்....
நெகிழ வைக்கும் திறப்படங்கள் ...
ஆயுளை கூடும் நகை சுவை ...
சிலிக்க வைக்கும் பாடல்கள் ...
விழி விருந்துதரும் நடனங்கள் ...
ஓடும் நீரில் காகித கப்பல் ..
வீசும் காற்றில் பறக்கும் பட்டம் ...
நான்கு சுவருக்குள் விளையாடும்
துடுப்பாட்டம் ...
கண் மயக்கும் காவியங்கள் ...
காதல் கூறும் கதைகள் ..
கண்கள் சொல்லும் கவிதை ...
உணர்வை உருக்கும் ஓவியம் ...
என்னை ரசிக்கும் நான் ....!!!

Published with Blogger-droid v2.0.10

Published with Blogger-droid v2.0.10

Tuesday 5 November 2013

உன்
ஞாபகங்களுடன்
ஓடுகிறது
என் கடிகார முட்கள் ....

Sunday 27 October 2013

கண்ணீர் சிந்தும் நேரங்களில...

விளையாடும் குழந்தை
அடிபட்டதும் அம்மாவை
அழைப்பது போல்
கண்ணீர் சிந்தும் நேரங்களில்
அனிச்சையாய் உன்னையே
தேடுகிறேன் நான்...

Friday 25 October 2013

உனக்காய் இழக்கிறேன் உன்னையும்.....! !

இனி இழப்பதற்க்கு ஒன்றும்
இல்லை என்னை இழந்தேன்
இதோ இன்று உன்னையும் இழந்துவிட்டேன்.
...!!
வாழ் நாள் முழுதும் வருத்தப்பட உன்
அன்பு இருக்கிறது போதும் இது போதும்
எனக்கு.....!!
நீ விலகிப் போகிறாய் உன் கரம் பற்றி நான்
கதரிடவே நினைக்கிறேன்... .!!
உனக்காய் இழக்கிறேன் உன்னையும்.....! !
எல்லாம்
கடந்து போகுமென்கிறார்க ள்...?? கடந்து போக
நீ என்ன
ஆற்று நீரா.. ???
என் உயிரின் துடிப்பு..... நீ கடந்து போனால்
நான் வாழ்வது எப்படி?......
நீ மடிந்து போ என்றாலும் நான் மனதார
போகிறேன்....
*என்னை இல்லை என் அன்பை உண்மையென
ஏற்றுக் கொள்..... *

கண்ணீருக்கு காரணம்...

உன் கண்ணீருக்கு
காரணம்
நானாயிருக்க கூடாது...
உன் கண்ணில்
நீர் வருமென்றால்...
அன்று
நானேயிருக்க கூடாது

Wednesday 23 October 2013

புரியவைத்து விட்டாய் வாழ்வு பொய் என்று!!

புரியவில்லை அன்பே... நீ நடத்தும்
நாடகங்கள்
ஒவ்வொன்றும் !!!
மறந்து விட்டேன் உன்னை.....!! என்று தான்
சொல்ல
நினைக்கிறன் ????
ஆனால் சொல்லி முடிக்கும் மறுகணம்
நினைவில்
நீ..!!!
பிரிந்து விட்ட பின்னும் உன் பெயர்
படித்தால் உள்ளம்
புல்லரிப்பது என்னவோ உண்மை தான்
அன்பே..!!
இந்த முறை உன் பிரிவு என்னை ஸ்தம்பிக்க
செய்யவில்லை.. காரணம் நீ என்னுள்
விட்டு சென்ற ரணங்கள்..!!!..
போகும் போக்கில் புரியவைத்து விட்டாய்
வாழ்வு பொய் என்று!!

Unmai....

Sunday 20 October 2013

நீ விலகிச் செல்வதால் !

ஒரு முறை நேரில் பார்த்த
உன்னை காலமெல்லாம்
என்னருகில் பார்க்க ஆசை !
நிறைவேறாது என்ற ஒன்றை
நிறைவேற்ற துடிக்குது மனம் !
துடிக்கும் மனம் ஏனோ இன்று
துடிப்பிழக்கிறது என்னை விட்டு
நீ விலகிச் செல்வதால் !

நேற்றே நான் இறந்து விட்டேன்...

சற்றே வியந்துதான் போகிறேன்
உன் மனதின் நிறம் மாறும்
குணத்தை எண்ணி....
அளவில்லா ப்ரியங்களுடன்
அணுஅணுவாய் என்னை காதலிக்க
முடிந்த உன்னால் எப்படி இன்னொரு
இதயத்தையும் காதலிக்க
முடிந்தது?
நேற்று விளையாட்டாய் உன்
கைப்பேசியை
எடுத்துப் பார்க்கையில்தான் என் மனம்
தற்கொலை செய்துகொண்டது.
எனக்கு மட்டுமே சொந்தமான
உன் Sent items' ல்
யாரோ ஒருவருக்கு
நீ அனுப்பிய ஐலவ்யூக்களும்,
உம்மாக்களும்
என்னுள் ஏற்படுத்திய வலியை
உன்னால் உணரக்கூடுமா?
என் குரல்
சேமித்து வைக்கப்பட்டிருந்த
உன் ரெக்கார்டிங்கில் இப்போது
இன்னொருவர் குரல்...
உன் தொலைபேசியில் இருந்த என்
அத்தனை புகைப்படங்களும்
எங்கே போயிற்று?
உன்னால் பதில் சொல்ல
முடிகிறதா?
என் முன்னாலே நீ உன்
புதுக்காதலுடன்
சிரித்து பேசுகையில்
நொடிக்கொருமுறை
உன் காதலின் நினைவுகளால்
கற்பழிக்கப்படுகிறேன்.
இறைவா என் எதிரிக்கும் வேண்டாம்
இப்படி ஒரு வேதனை.
எனக்கு நிச்சயமாய் தெரிகிறது
உன் ஸ்பரிசங்களும், உன் முத்தங்களும்
இனி இன்னொருவருக்கு தான்
சொந்தம் என்று...
மூளைக்கு புரியும் இந்த
உண்மையை
மனம் அடம்பிடித்து ஒப்புக்கொள்ள
மறுக்கிறது.
உன் வாசம் படிந்த கைக்குட்டை..
உன்னுடன் கண்டு களித்த
சினிமா டிக்கெட்..
ஓயாமல் சிரிக்கும் உன் புகைப்படம்..
காதலுடன் நீ வரைந்த கிரீட்டிங் கார்ட்
என உன்னை மட்டுமே நினைத்துக்
கொண்டே
இருக்க வேண்டும் என நான்
பத்திரப்படுத்திய
உன் நினைவுகள் அனைத்தும் வெறும்
நினைவுச் சின்னங்களாக
மட்டுமே இருக்கும் என
சத்தியமாய் நினைக்கவில்லை...
என் வசந்த காலத்தின்
ஒரு பக்கத்தை முற்றிலும்
இலையுதிர் காலமாய் செய்தாய்.
மனம் வலிக்கும் நேரங்களில்
உன் நினைவுகள் மட்டுமே சுகமாய்
இருக்கும்.
ஆனால் இன்றோ என் மனவலிக்கு
முழுமுதற் காரணமும் நீயாய்...
அழுவது அவமானச் சின்னம்
என்பது என் கொள்கை.
ஆனால் இன்றோ என் கண்ணீர்
சுரப்பிகள் கூட வற்றிவிட்டன.
தற்கொலை செய்துகொள்வது
கோழைத்தனத்தின் உச்சம் என
நினைத்திருந்தேன்.
கண் முன்னே இப்படி ஒரு வலியை
உணர்கையில்தான் தோன்றுகிறது
தற்கொலை பாலைவனத்தில்
நீரைப்போல்...
உன் மனதின் கொடூரத்தை தாங்க
இயலாமல்
ஒரு நொடியில் மணிக்கட்டை
கூரிய பிளேடால் அறுத்துக்
கொண்டேன்.
நீ கொடுத்த வலியைவிட
அது ஒன்றும்
வேதனை நிறைந்ததாய்
இருக்கவில்லை.
என் காதல்
நரம்புகளை அறுத்துவிட்டு,
நீ வீணை வாசிக்கிறாய்.
என் சந்தோஷ சிறகுகளுக்கு தீ
வைத்துவிட்டு,
நீ குளிர்காய்கிறாய்.
யாரை நோக்கியோ உன் பார்வைகள்.
குருடாய் போனது என் உலகம்.
யார் பெயரையோ உச்சரிக்க
தயாராய் உன் இதழ்கள்,
ஊமையாகிப் போனது என் தேசம்.
என் SMS
சேமித்து வைத்திருப்பாய்.
எதற்கு என்று கேட்டால்,
உன் நினைவுகள் வரும் போது
எடுத்து படித்து கொள்ள என்பாய்...
இப்போது உன் Outbox' ல் கூட என் SMS
இல்லை.
ஏன் இப்போதெல்லாம் என் நியாபகம்
உனக்கு வருவதில்லையா?
நான் அனுப்பிய
சில காதல் மெசேஜ்களையும்,
படங்களையும்
சேமித்து வைத்திருந்தாய்.
சில நொடிகள் சந்தோஷப்பட்டது என்
மனம்.
பிறகுதான் தெரிந்து கொண்டேன்
யாரோ ஒருவருக்கு Forward செய்ய
அதை
எல்லாம் நீ பத்திரப்படுத்தி
வைத்திருக்கிறாய் என்று..
"மனம் மரணமடைந்தது" என்ற
ஷெல்லியின்
வார்த்தையை அனுபவித்து உணர்ந்தேன்
அன்று..
வாழ்ந்துகாட்டு! வாழ்ந்துகாட்டு
என்று என் உறவுகள் எனக்கு
ஆறுதல் சொல்கின்றனர்.
இனி நான் எத்தனை கோடிகள்
சம்பாதித்தாலும்
நீ எனக்கு கொடுத்த அந்த காதலை
என்னால் சம்பாதிக்க முடியுமா?
என்னதான் நான் பென்ஸ் காரிலே வந்து
உன் முன்னால் இறங்கினாலும்
உன் துணையுடன் உன்னை பார்க்க
நேர்கையில்
என்னால் சிரிக்க முடியுமா?
வேறு யாரை நான்
கட்டி அணைத்தாலும்
அந்த அணைப்பில் உன் வெப்பத்தை
என்னால் மறந்துவிட முடியுமா?
எத்தனையோ அழகான கவிதைகளை
என்னை எழுத தூண்டியது நீதான்.
இன்று துயரங்களையும் சுமக்கும்
பக்குவத்தை
எனக்கு தந்து இப்படியும் கவிதைகள்
எழுதலாம்
என புதிய அனுபவத்தையும்
எனக்கு கற்று தந்தாய்.
உனக்கு நன்றி.
என் பெயர் சொல்லி அழைக்க மறந்து,
யாரோ ஒருவர் பெயரை சொல்லி நீ
அழைத்தாய்,
அந்த ஒரு நொடியில் லேசாய்
உதடு கடித்து
ஒற்றை வார்த்தையில் "சாரி" என்று
சொல்லிவிட்டு போய் விட்டாய்.
நேற்றே நான் இறந்து விட்டேன்...