Sunday 4 May 2014

Varumaiyin niram...

மனசு வலிக்குது....
பெத்தவ பார்த்திருந்தா,
பத்தி எரிஞ்சிருப்பா!
அண்ணந் தம்பி பார்த்திருந்தா,
அப்பவே செத்திருப்பான்!
அக்கா தங்கை பார்த்திருந்தா,
அழுதே போய் சேர்ந்திருப்பா!
சொந்தக்காரன் பார்த்திருந்தா,
செத்தே போயிருப்பான்!
ஊருக்காரன் பார்த்தாக்கூட
உயிரையும் விட்டிருப்பான்!
யாரு பெத்த புள்ளைய்யா நீ....
என் மனசு வலிக்குது!
மனுஷ சாதிக்கு மட்டும்தாய்யா
சமபந்தி விருந்து அங்கே!
புத்தி கொஞ்சம் கொறஞ்சு போனா
சகல ஜீவனும் சமம் இங்கே!
இலவசத்த அள்ளி தந்து
ஏமாத்தி ஓட்டு வாங்கி
அரியணையில் அமர்ந்திருக்கும்
அரியவகை மனிதர்களே....
இலவசத்த கொறைச்சிக்கிட்டு
இவர் மாதிரி ஜீவனுக்கு
ஏதாச்சும் செய்யுங்கய்யா....
என்னமாச்சும் பண்ணுங்கய்யா!