Friday 29 July 2011

காதலில் ஒரு தாய் தான்...

கல்லறை மீது
கண்ணீர் துளிகள்
எழுதும் வரிகளின்
பொருள் என்னவோ...?
வரிகளில் சொரிந்திருப்பது
காதலின் வலிகள் அல்லவோ...........?!
கண்ணீர் துளிகளின்
நிலையென்னவோ....?
அவை
உள்ளிருக்கும் உயிரை
உசுப்பி எழுப்ப
உதிரும் உளிகளோ........?!
நெடுநாள் தூங்காத தூக்கத்தை
இந்த இறுதி தூக்கத்தில்தான்
ஈடுகட்ட இங்கு வந்தாயோ......?
விடையில்லா கேள்வியின்
இருதியில் இட்ட
வினாக்குறியின் பக்கத்திலேயே
முற்று புள்ளியாய் முடிந்துவிட்டது
அவளின் இன்பங்களும்
வலியின் மடியிலே
வருத்தத்தின் பிடியிலே
படுத்திருக்கும் அவளின்
தூக்கங்கள் விலைபோகாமல்
விற்பனைக்கு வருகின்றன;
இலவசமாய் எடுத்துக்கொள்ள‌
எவரும் இல்லாமல்
இனி அவள் ஒருதாய்‍_ ஆம்
அவள் அப்படித்தான்
உயிர்ப் புணர்ந்து உருவான‌
காதலென்ற‌
பிறக்காத கருவின்
பிஞ்சுகால் நகம் கடிக்கும்
இவளும் காதலில்
ஒரு தாய் தான்
அடடே...தூங்காமல்
ஏன் அவள் அழுகிறாள்....?!
ஓ.........
அவனின் தூக்கத்திற்கு
இவள் சின்ன சின்ன
விசும்பலில்
தாலாட்டு பாடுகிறாளா.....?

No comments: