Saturday 25 February 2012

தயக்கமின்றி தலைவணங்கும்...


அந்தி சாயும் நேரம்
அழகிய நிலவொளி
அமைதியான மொட்டைமாடி
அன்பு செய்யும் உள்ளங்கள்
அழகோ கொள்ளை அழகு!

உணர்வுகளின் துண்டுதலால்
காதலித்த உன்னை
உணர்ச்சிகளின் தூண்டுதலால்
அத்துமீற விரும்பவில்லை
அது தான் தமிழ் பண்பாடு!

நாகரீகம் மாறலாம்
நடையுடையும் மாறிடலாம்
நம் தொன்று தொட்ட
பண்பான பண்பாட்டை
புண்ணாக்கிட முடிந்திடுமா?

காதலில் ஜெயிப்பதெல்லாம்
காலம் காலமாய் இருக்கிறது
கண்ணியத்தில் ஜெயித்துவிடு
காதல் மட்டுமல்ல
சுற்றமும் உன்னை
தயக்கமின்றி தலைவணங்கும்

No comments: