Tuesday 18 March 2014

பேரூந்து நிறுத்தத்தில் தவம் கிடக்கிறேன்

தோழியை செல்லமாய்
அழைத்தபடி பவ்வியமாக
என்னை கடந்துசெல்கையில்
தலை தாழ்த்திய
ஓரப் பார்வையாலும்
சிவந்த இதழ்களின்
சிறு புன்னகையாலும்
மலர் முகத்தின்
வெட்கத்தாலும் என்
ஆயுளின் நாழிகைகள்
நித்தமும்
புத்துயிர்பெற
நீ
கல்லூரி சென்றுவரும்
பேரூந்து நிறுத்தத்தில்

தவம் கிடக்கிறேன்

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

முந்தைய கவிதையும் அருமை...