காலையில் எழுந்ததும் பல் துலக்கி குளித்து முடித்து ஆகாரம் உண்டு ஒன்று/இரன்டு மணிநேரம் பிரயாணித்து அலுவலகம் சேரும் முன் கடிகாரம் பகல் 11-ஐ தொட்டுவிடும்
கணிப்பொறியை திறந்து அன்றைய செய்திதாள்களை அலசிவிட்டு மினஞ்சல்களுக்கு பதில் அனுப்பி முடித்து பார்த்தால் கடிகாரம் பகல் 1 என பல் இளிக்கும்
மீண்டும் ஆகார மூட்டையோடு சென்று திரும்பினால் அரை நாள் ஓடியிருக்கும்
மீண்டும் கணிப்பொறியை திறந்து அன்றைய பணிகளை செய்து அனுப்பவேண்டிய மினஞ்சல்களை அனுப்பி முடித்து திரும்பி பார்கையில் சில/பல SMS / Missed calls என் கைபேசியில் தொற்றி கொண்டிருக்கும் அப்போதுதான் நினைவிற்கு வரும் மனைவி வாங்கி வர சொன்ன பொருட்கள் ஆனால் அதற்குள் கடிகாரம் இரவு 8-ஐ தொட்டுவிடும்
மீண்டும் ஒன்று/இரன்டு மணிநேரம் பிரயாணித்து வீட்டை அடைந்து டிவி-ல் முகம் புதைத்து இரவு ஆகாரம் முடித்து வாழக்கையின் உண்மையான அர்த்தத்தை புரிந்துகொள்ளமலே... வாழக்கையை ரசித்து வாழ்வது எப்படி என்று அறிந்துகொள்ளமேலே... உறங்கி போகிறோம்...
No comments:
Post a Comment