Sunday 6 November 2011

புதிய சந்தியாலாவது...


கண்மூடி வாய்பொத்தி காதடைத்து
கணிய‌மாய் வாழ கற்று தந்தாராம்
மகாத்மா காந்தி
காந்தியின் நாட்டில்
அவர் கொள்கைகள் இருப்பது
கல்வியேட்டில்................!?
இந்த இழிநிலையை எண்ணிபார்த்தால்
உள்ளத்தில் உதிரம் சொட்டும்
களவு கற்பழிப்பு கயமைதனமெல்லாம்
காந்தியின் நாட்டில்
வாந்தியெடுப்பது ஏனோ......?!?
ஆனாலும்
காந்தியின் குரங்குகள்
கண்மூடி வாய்பொத்தி
காதடைத்து காக்கின்றன‌
கொள்கைகளை...,
கந்தி மறந்துவிட்டர் போலும்
குரங்குகளின் மனதை கட்டிபோட‌
அக்கரை அதிகமுள்ள
சமுக ஆர்வளர்
யாரேனும் இருந்தால்
அந்த குரங்குகளின்
கண்வாய் காதை திறந்துவிட்டு
மனதை கட்டுங்கள்
அவைகளின் புதிய சந்தியாலாவது
பூரிக்கட்டும் பூமாதிவி.....

No comments: