Saturday 11 February 2012

ஒன்றுதான் வித்தியாசம்.


நீண்டு கடந்த
நாட்களின் பின்
தூரத்திலாவது
உன்னை
கண்டபோதுதான்
கனவுகள் மரித்தாலும்
என் - கண்கள்
இன்னும்
உயிர்வாழ்வதை உணர்ந்தேன்.
இமைக்காமல்
பார்த்திருக்கலாம்.
கண்ணுள் வந்த உன்னை
இமைத்து
உடனே
அழித்துவிட
இஷ்டம் இல்லை எனக்கு.
உறக்கத்திலிருந்த
என்
உணர்வுகளின்
பற்றைகளுக்குள்
தீமூட்டிப் போனது
உன்
திடீர் தரிசனம்.
இதயத்தை
காலி செய்தாய்
நேற்று.
பின்னர்,
என்
கண்களுக்குள்
ஏன்
வலி தந்தாய்
இன்று?
உறக்கத்திற்கும்
உன்னை
பிடித்திருக்கவேண்டும்,
உன் நினைவால்
உறங்காமல்
கிடக்கிறது,
என்
உறக்கம்
கண்களில்.
காதலியாய்
பார்த்துப் பழகிய
கண்கள்,
கண்டவுடம்
கண்டபடி கூசின.
முதல் முறை
உன்னை
யாரோ ஒருவராய் பார்க்க.
உனக்கும்
எனக்கும்
ஒன்றுதான்
வித்தியாசம்.
நீ
என்னை மறந்து தூங்குகிறாய்.
நான்
உன்னை மறக்க தூங்குகிறேன்.

1 comment:

bhuvana said...

ungal kavithaigal arumai...