
குதிரைகள்,
காலச்சுழற்சியில்
முதுமை ஒட்டுக்குள்
பதுங்கும்
நத்தைகளாய்ப் போயின...!
உறவுகள் உதற
வெளியே விழுந்த இவர்கள்
பெற்றோர்கள்...!
உள்ளத்தில் ஊனமுடைய
குழந்தைகளைப் பெற்றவர்கள்...!
கவி வரிகளுக்குள்
கட்டுப்படாத
மனவலிகளை
சுமந்து நிற்கும் இவர்கள்
இனிஷியல் கொடுத்தவர்கள்
இதயமில்லா இளசுகளுக்கு...!
அடைகாத்த குஞ்சுகளே...
கொத்தி விரட்டியதால்
அடைக்கலம் தேடும்
இவர்கள்,
புறக்கணிக்கப்பட்ட ஏணிகள்...!
துடுப்புத் தொலைந்த
தோணிகள்...!
==========
No comments:
Post a Comment