
காதல் விடுமுறை நாட்கள்
ஒவ்வொரு நிமிடமும்
ஒவ்வொரு யுகமாக கரைகிறது
நிலவே உன்னை பார்க்காததால்
நிமிடங்கள் சென்று விடகூடாதா
காலங்கள் கரைந்து விடகூடாதா
நாம் மீண்டும் சந்தித்து விடகூடாதா
அக்கணம் உறைந்து விடகூடாதா
இப்படி என் மனம் குழம்பி தவிக்கிறது
நிமிடங்கள் செல்ல
கடிகார முள்ளை திருப்பினேன்
நிமிடமும் செல்லவில்லை
நாட்களை கழிக்க
நாளிகையை கிழித்தேன்
நாட்களும் நகரவில்லை
குளிர்காலமும் கோடை ஆனதே
கணமும் ரணமாய் மாறுதே
மெழுகாய் மனமும் உருகுதே
மெல்ல உயிரும் சாகுதே
பெண்ணே.....!
உன்னை பார்த்திடும் நாட்கள் காலம்
நதியாய் போல்
ஓடுவது ஏன்..............!
உன்னை பார்க்காத நிமிடம் காலம்
நத்தை போல் நகர்வதேன்....
posted from Bloggeroid
No comments:
Post a Comment