Monday 2 May 2011

பிடிவாதக்காரி…

ஒரே ஒரு முறை
உன்னை பார்த்து விடுவதற்க்காய்..
ஒவ்வொரு நாளும் என்னை
சாலை முனைகளில் மணி நேரம்
காத்திருக்க வைத்தாய்…
ஒரே ஒரு உன் ஓரப் பார்வை
என் மேல் விழுவதற்க்காய்..
ஒவ்வொரு நொடியும் எனை
ஏக்கத்தோடு நிற்க வைத்தாய்…
ஒரே ஒரு உன் புன்னகை
என்னை வசீகரிப்பதற்க்காய்..
ஒவ்வொரு தடவையும் எனை
துடித்துத் தவிக்க வைத்தாய்…
ஒரே ஒரு வார்த்தை
நீ என்னோடு பேசி விடுவதற்காய்..
ஓராயிரம் முறை என்னை
திக்கித் திணற வைத்தாய்…
ஒரே ஒரு சம்மதம்
நீ சொல்லி விடுவதற்க்காய்..
ஓயாமல் எப்போதும்
உன் பின்னால் திரிய வைத்தாய்…
ஒரே ஒரு முறை
உன்னைத் திட்டி விட்டதற்க்காய்..
பல இரவுகள் உறங்காது
எனை அழுது புரள வைத்தாய்…
ஒரே ஒரு முறை
உன் கைக் கோர்த்து நடப்பதற்க்காய்..
ஒன்றரை மணிநேர
தொலைப்பேசி புலம்பல் வைத்தாய்…
சலிக்காது இத்தனையும்
செய்து உனை காதலியாய்
நானின்று கொண்ட பின்னும்…
ஒரே ஒரு முத்தமதை
உன்னிடம் நான் கேட்டதற்க்காய்..
ஓராயிரம் தடவை என்னை
கெஞ்சி சிணுங்க வைக்கிறாயே…
இருந்தாலும் சரியான
பிடிவாதக்காரி நீ…

No comments: