Monday 2 May 2011

கனவில் வந்த வேந்தன்…

காற்றையும் இருளையும் கிழித்துக்கொண்டு
வெளிச்சத்தோடு வேகம் கொண்டு பாயும்
வெண்ணிறப் புரவியில் ஏறி வரும்
வேந்தனாய் உனை என்
கனவில் கண்டு கண் விழித்தேன்..
நீயோ ஒரு குழந்தையைப் போல
அமைதியாய் உறங்கிக்கொண்டு இருக்கிறாய்
மெலிதாய் என்னை அணைத்தபடி !
எனக்கென்னவோ அந்தக் கனவைவிட
இந்த நிஜம்தான்
ரொம்பப் பிடித்திருக்கிறது…

No comments: