Sunday 8 January 2012

உன் அனுமதியில்லாமலே.!

நீ சென்ற நாள் முதல்
நான் நானாக இல்லையடா!
பசி மறந்தேன்!
தூக்கம் தொலைத்தேன்!
என் இதயம் (உன்னில்)
துடிக்க வில்லையா!
நீ (என்னில்) படும் வேதனையை கண்டு !
காலை முதல் இரவு வரை உன்
நிழல் படத்தை கண்டு -
உன் கைக்குட்டையின் வாசத்தை
சுவாசித்து உயிர் வாழ்கிறேன்!
உன் கைக்குட்டை சொல்லும்
என் கண்ணீரின் கதையை!
இதே வேதனையில் அங்கு
நீயும் இருப்பதை உணர்கிறேன் நான்!
உன் குரல் கேட்க தவிக்கும் என்
மனம் படும் வேதனையை
அறிவாயா என் உயிரே!

No comments: