Sunday 8 January 2012

காதல் வாழ்க்கையும் தான்


இதயமென்ற கோவிலிலே
காதல் என்ற விளக்கேற்றி
கனவுகள் எனும் எண்ணை ஊற்றி
கன்னியிவள் காத்திருந்தாள்!

சில்லென்ற காற்றிற்கு
கைகளையே அணையாக்கி
காற்றிற்கு வேலி போட்டு
காத்து வந்தாள் விளக்குதனை!

கைகளையும் மீறி இங்கே
காற்றெல்லாம் புயலாகி
சுடரோடு சேர்த்து இங்கு
விளக்கையும் அழிக்கிறது

விதி விட்ட பாதையிலே
விளக்கோடு சேர்ந்திங்கு
விட்டில் பூச்சியாய் எரிவது
இவள் ஆசைகள் மட்டுமல்ல
காதல் வாழ்க்கையும் தான்

No comments: