Saturday 14 January 2012

பொங்கலோ பொங்கல்…..


தீமைகளைக் கண்டால்
தீயாகி எரித்து..
மனதை என்றும்
சுத்தமாக்கி வைத்து..
புனிதமாய் வாழ்பவனின் போகி…..

கடன் வாங்கி பயிர் செய்து
பசியோடு அடுத்தவன் வயிறு நிரப்பும்
எம் பாசமான உழவனின் வீட்டுப் பொங்கல்..

உழைத்துக் களைத்த கால்நடைகளின்
கால்கள் தொட்டு வணங்கி..
ஜல்லிக்கட்டில் துள்ளித் தெரியும்
காளைகளை அடக்கி..
நெற்றிப் பொட்டில் வெற்றி திலகமிடும்
எம் ஊர் இளைஞனின் மாட்டுப் பொங்கல்…..

சுற்றம் நட்பு உள்ளம் குளிர
இன்பம் பகிர்ந்து..
துன்பம் துடைத்து..
என்றும் மற்றவர்க்கு
துணையாய் நிற்பவனின் காணும் பொங்கல்…..

பொங்கல் பொங்கல்..
பொங்கலோ பொங்கல்…..
பொங்கல் பொங்கல்..
பொங்கலோ பொங்கல்…..

அது சரி…..
வீட்டுக் குக்கரில் அரிசி கொட்டி..
கேஸ் அடுப்பில் நெருப்பை ஏற்றி..
சூரியின் எழுந்த நெடுநேரம் கழித்து எழுந்து..
பெயருக்கு பொங்கலோ பொங்கல் சொல்லி..
சம்பிரதாயத்திற்க்காய் சாமி கும்பிடும்
வறண்ட மனங்களுக்கு எதற்கு…
சாமானியன் கொண்டாடும்
சக்தி மிக்க பொங்கல்……

No comments: