Saturday 15 October 2011

உன்னை இழந்த நாள் முதல்


என்னை பிடிக்கவில்லை என்றால் ஒரே வார்த்தையில் 
பிடிக்கவில்லை என்று விலகிவிடு ........ 

என்றாவது சந்தோசம் தருகிறாய் அதை அனுபவிக்க 
முதலே வார்த்தையால் கொல்கிறாய்........ 

நான் சிரிப்பது பிடிக்கவில்லை என்றால் என்னை வெறுத்து 
விடு வாழ்க்கை முழுவதும் சிரிக்கவே மாட்டேன் ...... 

என்னை வருத்துவதாய் எண்ணி வெறுப்பாய் பேசி பேசி 
என் உயிர் போன பின் உன் சிரிப்பை இழந்து விடாதே .... 

இறுதியாய் ஒன்று சொல்கிறேன் உன்னை இழந்த நாள் 
முதல் நான் உயிரில்லா ஜடம் தானடி ,,,,,

No comments: