Thursday 8 March 2012

கன்னியிவளை மன்னித்துவிடு

அன்புக்குரியவரிற்கு
ஆசை வைத்த உள்ளத்தின்
இதய பூர்வ மடல்
ஈரைந்து மாதங்கள்
உயிரோடு எனை சுமந்து
ஊருக்கு காட்டிய
என் இனிய பெற்றவளுக்காய்,
ஏர் சுமந்து எமை காக்கும்
ஒழுக்கமான தந்தைகாய்,
ஓர் மனப்பட்ட எம் காதலை
ஔஷதமாய் நினைத்து
இஃது தியாகம் செய்கிறேன்
கண்ணாளனே!
காரிகை இவள்
கை கூப்பிக் கேக்கிறேன்
கன்னியிவளை மன்னித்துவிடு

No comments: