Saturday 3 March 2012

இறக்கத்தான் முடியும் !


பெண்ணே !
அன்னையும் தந்தையும்
உன்னை உறவாக்கி கொண்டவர்கள் !

அண்ணனும் தம்பியும்
உனக்கு உறவாக்கபட்டவர்கள் !

தோழனும் தோழியும்
உன்னால் உறவுகளாக ஆக்கப்பட்டவர்கள் !

உன் உறவினர்கள்
உனக்கு உறவுகளாக சேர்க்கப்பட்டவர்கள் !

உன்னை உரிமையாக்கி கொள்பவன் கணவன் !

உன்னை உயிராக்கி கொண்டவன் நான் !

உயிரே ..... பிரியாதே
பிரிந்து என்னுயிரை பிரிக்காதே !

உறவானவர்கள் பிரிந்தால் மறக்கலாம்
உயிரானவள் பிரிந்தால் மறக்க முடியாது

இறக்கத்தான் முடியும் !

No comments: