Thursday 8 March 2012

உயிர் பிரியும் தருணங்கள்!


உன்னை பார்க்கும் வரை
என் கண்களுக்கு
கட்டளை போட்டிருந்தேன்
கண்ணீர் என்ற ஆற்றிற்கு
அணை போடும் படி!

உன்னை பார்த்த மறுநொடி
என்னையும் மீறி
கரைபுரண்டு உன்னையும்
காயப்படுத்திய என் கண்ணீரை
எப்படி தண்டிப்பது!

பிரிவின் கொடுமையை விட
அந்த பிரியப் போகும்
வலிகள் நிறைந்த நொடிகள்
வாழ்வில் மறக்க முடியா
உயிர் பிரியும் தருணங்கள்!

உன் நினைவுகளை சுமந்த
என் வலிகள் நிறைந்த இதயம்
உனக்காக கையசைத்து
உள்ளத்து உறுத்தலுடன்
உருக்கமாய் செல்கிறது!

No comments: