Thursday 8 March 2012

காதல் என்றும் புனிதம்தான்…


உடலை பிசைந்து தின்னும் காமம்
நாகரீகம் கருதி
காதலென்னும் பெயர் சூட்டிக் கொள்கிறது…

உயிரை உன்னதமாக்கும் காதலோ
தன் பெயர் களங்கமாவது கண்டு
செய்வதறியாமல் திகைக்கிறது…

எந்த திசையாய் இருந்தால் என்ன
விடியல் என்பது கிழக்கில்தான்..
எத்தனை களங்கம் செய்தாலும்
காதல் என்றும் புனிதம்தான்…

No comments: