Friday 20 April 2012

தவிக்கும் என்னை வாழவும் வைப்பாயா...!

நடிக்கும் ஆசை
எனக்கு இல்லை
நான் நடிகனும் இல்லை
ஆனாலும்,
ஒவ்வொரு கணமும்
நடிக்க தொடங்கிவிட்டேன்...
உள்ளத்தில் உன்னையும்...
உன் நினைவின் சுகங்களையும்
பிரிவின் வேதனைகளையும்
சுவாசமாய் கொண்டு
உயிர் வாழ்கிறேன்...
இதயத்தில் இதம் செய்யும்
உன் நினைவுகள்
வலிக்கும் போதெல்லாம்
வழி தெரியாமல்...
பிரிவின் விடை தெரியாமல்
விழிகள் வியர்க்கின்றன...!
உள்ளத்தில் வலிகளை
வைத்துக்கொண்டு
உதடுகளில் புன்னகைக்கிறேன்
நடிக்க தெரியாத என்னை
நடிக்க வைத்தவளே
வாழத்தெரியாமல்
தவிக்கும் என்னை
வாழவும் வைப்பாயா...!

No comments: