Monday 2 April 2012

உன் அழகின் வெளிச்சம்....

நீ சூரியன் என்று மாறிவிட்டாய்… 
பூமியாய் எப்பொழுதும் 
உன்னையே சுற்றிச் சுற்றி வருவதே 
எனக்கு போதுமானதாக இருக்கிறது ! 



உன்னை நெருங்கவும் முடியாமல் 
விலகவும் இயலாமல் 
ஒரு எண்ணக்கோட்டுக்குள் 
அந்த எல்லைக்கோட்டுக்குள் 
உனையே சுற்றி வருகிறேன் ! 



சில பாதி பகல் சில பாதி இரவு 
மாறி மாறி நடக்கிறது என்னுள் ! 



உனக்கான நினைவுகளை எல்லாம் 
சந்திரக் கூட்டினுள் சேமித்து வைக்கிறேன் பத்திரமாய் ! 



உன் அழகின் வெளிச்சம் பட்டுப் பட்டு 
இப்பொழுதெல்லாம் இப்படித்தான் 
ஒளிவெள்ளம் வழிய 
வாழ்ந்துகொண்டிருக்கிறேன் 
நான் உன்னால் ! 

No comments: