Tuesday 24 April 2012

எதற்காக சிரிக்கிறாய்....

" என் மனதை காயப்படுதியவளே
எதற்காக சிரிக்கிறாய்.

" அன்பை உனக்கு வழங்கினேன் காதல் கடிதமாய்,
பாசங்களை உனக்கு பகிர்ந்தளிதேன் புத்தகங்களாக,
ஆசையை உன்னிடம் அனுப்பி வைத்தேன் கைகுட்டயாக,
என் உயிரையே உருமாற்றி அனுப்பினேன் உனக்காக,

" இன்று உன் வாழ்வில் நான் யாரோ என்றாகிவிட்டேனோ,

" அன்று தேவைப்பட்ட இன்று தேவைப்படாத
அன்பு, ஆசை, பாசங்களை நேரடியாக திருப்பி கொடுத்துவிடாதே.

" என் இதயத்தில் அவ்வளவு திறன் இல்லை
இறந்தபின் வைத்துவிடு என் சமாதியில்......
என்னவளே வைத்துவிடு

No comments: