Friday 29 April 2011

பூமிச்சூடு…


கத்திரி வெயிலுக்கு முன்னரே
நம்மை இஸ்த்திரி போடுகிறது அனல்..
நவம்பருக்கு முன்னமே
விடாமல் கொட்டித் தீர்க்கிறது மழை..
பகலில் பெரும் வெப்பம்..
இரவில் கடும் குளிர்..
பாலைவனத்திற்கு இணையாக
மாறிக் கொண்டிருக்கிறது நமது வாழுமிடம்..
காரணம்..
கண்முன் மாறிய காலநிலை மாற்றம்..
பாதை தவறிய பருவநிலை மாற்றம்..
உடலிலும் மனதிலும் உள்ளது போதாதென்று
ஓசோனிலும் போட்டுவிட்டோம் ஓட்டைகளை..
சூடாகிக்கொண்டே போகிறது பூமி..
எந்நேரமும் எதையும்
நிகழ்த்திடும் வன்மத்தோடு..
நம் இஷ்டத்திற்கு இயற்கையை
ஒருபோதும் வளைக்க முடியாது..
ஒருநாள் இதை இயற்கை நிச்சயம்
நிரூபிக்கும்..
உணரவும் திருந்தவும்
நாமிருப்போமா என்பது சந்தேகமே..
.

No comments: