Friday 29 April 2011

சமரச முத்தம்…

சண்டையிட்ட கோபத்தில்
சத்தமின்றி அழுது கொண்டிருக்கும் உன்னை
என்ன செய்தும்
சமாதானப்படுத்த முடியாமல் போகும் நிலையில்..
அடுத்து என்ன செய்வதெனத் தெரியாமல்
இழுத்தணைத்து நான் வைக்கும் சமரச முத்தத்தில்
சட்டென சமாதானம் அடைந்து
செல்லமாய் என்னை அடித்தபடி
கண்ணீரோடு  சிரித்து விடுகிறாய் நீ..
அடியே..
அன்னை அடித்தாலும்
அவளையே கட்டிக்கொண்டு அழும்
சின்னக் குழந்தைக்கும் உனக்கும்
என்னடி வித்தியாசம் !

No comments: