Saturday 30 April 2011

மொட்டைமாடிப் பூ…

ஒரு மஞ்சள் மாலைப் பொழுதில்
மொட்டைமாடிக் கட்டைச் சுவற்றில் அமர்ந்து
சூரியனைக் காணாது முனை கவிழ்ந்த
சூரியகாந்திப் பூவைப்போல
தலை குனிந்து படித்துக் கொண்டிருக்கிறாய் நீ..
எதிர்மாடியில் படிப்பதாய்
நடித்துக்கொண்டிருக்கிறேன் நான்
உன் முகமலர்தலுக்கான சூரிய வெளிச்சமாய்…

No comments: