Friday 29 April 2011

அந்தரங்கப் புன்னகை…


முற்றாத இளம் அதிகாலை
ஒரு சூரிய உதயத்தைப் போல
கிழக்கில் நீ நடந்து வருகிறாய்..
பக்கத்தில் வர வர
கூடிக் கொண்டே போகிறது உன் அழகு..
நானோ அசைவற்ற மரமாய்
உன் வருகையை
வைத்தக்கண் வாங்காமல் பார்த்துக்கொண்டே நிற்கிறேன்..
வந்து விட்டாய் என்னருகில்..
இப்பொழுது இயல்பாய் இருக்க முயற்சித்து முயற்சித்து
முடியாமல் தோற்றுக்கொண்டே இருக்கிறேன் நானுன் முன்னால்..
அக்கணத்தில் நெருங்கி வந்து நீ சிந்திய
அந்த அந்தரங்கப் புன்னைகைக்கான அர்த்தம்
எனக்கு மட்டும்தான் தெரியும் !

No comments: