Friday 29 April 2011

படைப்புக் குற்றம்…


விஷம் கலந்துவிட்டது விந்தணுக்களில்..
அதனால்தான் இப்போது
எங்கு பார்த்தாலும் பிறப்பு பிரச்சனைகள்..
கருத்தரிப்பதை கடினமாக்கி
வைத்திருக்கிறது தற்காலம்..
இயந்திரமாய் இயங்கி
கலவியை சம்பிரதாயமாய் செய்து
நாளைகளுக்காக நில்லாமல் ஓடிக்கொண்டு
நிகழ்காலத்தை தொலைத்துக் கொண்டிருக்கும் நாம்..
நமது பழக்க வழக்கங்களை பாதை மாற்றிவிட்டு
படைத்தவனை குற்றம் சொன்னால் என்ன நியாயம்..
 .

No comments: