Friday 29 April 2011

சாலை விதி…

புறவழிச்சாலையின் புடனியை மிதித்தபடி
பறந்து கொண்டிருக்கும் வாகனக் குவியல்களில்..
சற்று முன் கடந்த   ஏதோ ஒரு வாகனம்
நடு வழியில் சிதறி விட்டிருந்த
அரிசி மணிகளை தின்பதற்காய்
ஆசையோடு ஓடி வந்த
ஆட்டுக்குட்டி அறிந்திருக்கவில்லை..
அடுத்த நொடி
அது அடிபடப் போவது
அரிசி ஏற்றி வரும் வண்டியில்தான் என்பதை..
.

No comments: