Friday 29 April 2011

நிஜ வாழ்வு..

தங்கக் கம்பிகளை சுவர்களாய் சுற்றிலும் வளைத்து..
கதவுகளை வைரங்களாலும் மாணிக்கங்களாலும் 
முத்துக்களாலும் அலங்காரம் செய்து..
வெள்ளிக் கம்பியில் ஊஞ்சல் செய்து..
உள்ளே விட்டான்
அந்த அபூர்வ பஞ்சவர்ண பேசும் கிளியை..
அமைதியாய் அமர்ந்திருந்த அதனிடம்
பெருமிதமும் கர்வமும் பொங்க கேட்டான்..
“இதை விட சிறப்பான இருப்பிடம்
இருக்க முடியுமா என் செல்லக் கிளியே..”
அவன் என்ன செய்தும் அதுவரை
வாய் திறக்காத கிளி
வெறுமையோடு பதில் சொன்னது..
“ஏனில்லை முட்டாளே..
இருக்கிறதே..
துணையோடும் சுற்றத்தோடும்
குறிப்பாக சுதந்திரத்தோடும்
நான் வாழ்ந்த அந்த
பட்டுப் போன பழைய மரத்தின் கிளை..”

No comments: