Saturday 30 April 2011

கண் வந்த கலை…


ஒரு நீர்மூழ்கிக் கப்பலைப்போல
உள்ளுக்குள் இருந்து வேவு பார்க்கும் திறமை..
என்னைப் பார்க்காமலே பார்க்கும்
உன் கண்களுக்கு இருக்கிறது..
நான் பாராத சமயங்களில்
என்னைப் பார்க்கவும்..
நான் பார்க்கும் பொழுதில்
பாராததுபோல நடிப்பதும்..
கை வந்த கலை.. இல்லை.. இல்லை..
கண் வந்த கலையாக
இருக்கிறது உனக்கு..
ஏதாவதொரு தருணத்தில்
உன் கணக்கு தவறிப்போய்
எதிர்பாராமல்
என் கண்களோடு உன் கண் நோக்கும் நொடியில்
சட்டென சலனமடைந்து
பார்வை விலக்கி 
இயல்பாய் இருக்க நீ முயற்சித்தாலும்
அக்கணத்தில் உன் முகமெங்கிலும்
நிரம்பி வழியும் வெட்கம்
காட்டிக் கொடுத்துவிடுகிறது
உன் காதலை…

No comments: