Friday 29 April 2011

புரிதல்…

சாவி கொடுத்தால் சொன்னதைச் செய்யும்
பொம்மைப் பறவையோடு
விளையாடிக் கொண்டிருந்த சின்னஞ்சிறு  மகள்..
தூரத்தில் கைக் காட்டி
“அப்பா அது மட்டும் நான் சொல்றத கேக்க மாட்டேங்குது..”
எனச் சொல்லும் போது எப்படி புரிய வைப்பது
அது நிஜப் பறவை என்பதை !

No comments: