Friday 30 December 2011

என் காதல் வித்தியாசமானது !


நான் காதலிப்பது
உன் உடலை அல்ல
உன் உயிரை
நான் விரும்புவது
உன் அழகை அல்ல
உன் மனதை
உன்னுடன் வாழ நான்
ஆசைப்படவில்லை
நீ வாழும் உலகில் வாழவே
ஆசைப்படுகிறேன் !
உருவமில்லா உன் மனதை கேட்டு
உருவமில்லா என் உயிர்
துடிக்கிறது உயிர்நாடியாய் !
தகப்பன் வீட்டில் நீ இருக்கும் போது
பிறந்த உன் மீதான என் காதல்
நீ கணவன் வீடு சென்றாலும்
உயிர் வாழும்
மனம் கொண்டு மனம் சேர்த்து
என் வாழ்வில் மணம் வீச செய்தவளே !
என் மன அரண்மனையின் மகாராணியே !
நீ வாழும் உலகில் வாழ்வதே
எனக்கு போதும் !
இப்போதாவது புரிந்துகொள்
என் காதல் வித்தியாசமானது !

No comments: