Monday 12 December 2011

நம் காதலில்.....


நீ பனியாக இருந்தால்
நான் குளிராக இருப்பேன் .......!
நீ நெருப்பாக இருந்தால்
நான் அனலாக இருப்பேன்.......!
நீ நீராக இருந்தால்
நான் கலவையாக இருப்பேன்.......!
நீ பூவாக இருந்தால்
நான் வாசமாக இருப்பேன்.......!
நீ மழையாக இருந்தால்
நான் குடையாக இருப்பேன்.......!
நீ பசுவாக இருந்தால்
நான் மடியாக இருப்பேன்.......!
நீ இசையாக இருந்தால்
நான் ரிதமாக இருப்பேன் .......!
நீ மூங்கிலாக இருந்தால்
நான் காற்றாக இருப்பேன் .......!
நீ கடற்கரையாக இருந்தால்
நான் மணலாக இருப்பேன் .......!
நீ செம்மொழியாக இருந்தால்
நான் இலக்கணமாக இருப்பேன் .......!
நீ கவிதையாக இருந்தால்
நான் கவிஞனாக இருப்பேன் .......!
நீ கண்களாக இருந்தால்
நான் கண்ணீராக இருப்பேன் .......!
நீ தாயாக இருந்தால்
நான் சேயாக இருப்பேன் .......!
நீ நிறமாக இருந்தால்
நான் நிறம் மாறி இருப்பேன் .......!
நீ மரமாக இருந்தால்
நான் வேராக இருப்பேன் .......!
நீ தசையாக இருந்தால்
நான் குருதியாக இருப்பேன் .......!
நீ நிலவாக இருந்தால்
நான் வானமாக இருப்பேன் .......!
நீ நட்சத்திரமாக இருந்தால்
நான் வெளிச்சமாக இருப்பேன் .......!
நீ சொற்களாக இருந்தால்
நான் காவியமாக இருப்பேன் .......!
நீ செய்யுளாக இருந்தால்
நான் திருக்குறளாக இருப்பேன் .......!
நீ தரையாக இருந்தால்
நான் நிழலாக இருப்பேன் .......!
நீ நானாக வேண்டும்
நான் நீயாக வேண்டும்
நாம் நாமாக வேண்டும்
நம் காதலில் இத்தனை ஒற்றுமை வேண்டும்
என்பதற்காகவே நான் பழகிய அர்த்தங்கள்
இந்த கவிதை....!!! 

No comments: