Wednesday 14 December 2011

காதலிப்பதைத் தவிர?

நான் மழையில்
நனைந்ததற்கு
மழையை
ஏனடா திட்டுகிறாய்?
என்றால்
என்னவளான
உன்னைத் தீண்ட
அதற்கு
எத்தனை தைரியம்
என்கிறாய்...!
காற்று
என்னை நித்தமும்
தீண்டுகின்றதே
அதை என்ன செய்வாய்?
என்றதற்கு
அது என் முச்சுக்காற்று
தானே
நான் தான் அனுப்பி வைத்தேன்
உன்னை தழுவி இருக்க...!
என்றாயே பார்க்கலாம்
உன்னை என்னடா செய்ய காதலிப்பதைத் தவிர?

No comments: