Saturday 10 December 2011

உன் புன்னகை வேண்டும் ....


நினைவில் நிலையாய் நிறைந்தாள்
உதட்டில் பெயரால் இனித்தாள்
வானுக்கு நிலவு வேண்டும்
பயிருக்கு நீர் வேண்டும்
என் உயிருக்கு உன் புன்னகை வேண்டும்

என் கண்களை உற்றுப் பார்
உன் விம்பம் தெரியும்
என் உடலைத் தொட்டுப் பார்
உன்னை நீ உணர்வாய்
என் இதயத் துடிப்பைக் கேட்டுப்பார்
உன் பெயரை அது சொல்லும்


வன் நிறைய நட்சத்திரங்களுண்டு
விடி வெள்ளி போல் வருமா
உலகெல்லாம் பெண்கள் உண்டு
உன் போல் வருமா

இரு விழிகளை
ஒரு முறை பார்தது
இருபத்தி நான்கு
மணி நேரம்
நினைவில் நிறைந்தது

No comments: