Wednesday 14 December 2011

வியந்து போய் நிற்கிறேன்...


மூளையில் சேகரித்து
வைத்திருந்த நினைவுகளிலிருந்து
ஒன்றை எடுத்து சரி பார்த்தேன்.
நான் எப்போதிலிருந்து
கவிதை என்ற ஒன்றை
எழுத ஆரம்பித்தேன்?
ஆம் சகியே!
உன்னைப் பார்த்ததிலிருந்துதான்
நான் எழுதிய முதல் கவிதையே
உன்னைப் பற்றித்தான்.
எப்படி இருக்கிறது
என்றதற்கு
'கிறுக்கல்கள்' என்று சொல்லி
நகர்ந்து போனாய்.
கவிதையைப் பற்றி
கவிதை எழுதினால்
எப்படி கிறுக்கலாகும்
என நினைத்து குழம்பிப் போனேன்.
பின்பு நான் எழுதிய
அனைத்தையும் கிறுக்கல்கள்
என்றாய், ஏன் என்னையே
கிறுக்கன் என்றாய்.
காலத்தின் கட்டாயத்தினால்
நான் உன்னிடம் எழுதிய
முதல் கிறுக்கலை
பத்து மாதத்திற்கு
பிறகு 'நீ எழுதிய அழகிய
கவிதை இது' என்கிறாய்.
இங்கே
கவிதை கிறுக்கல்கள் ஆனதும்
என் கிறுக்கல் கவிதை ஆனதையும்
நினைத்து
வியந்து போய் நிற்கிறேன்
நான்!!!

No comments: