Saturday 10 December 2011

காத்திருக்கின்றேன்.....

விண்வெளியில் தாவின என் கால்கள் 
நம் காதலை புரிந்தபோது...... 

நிலவு கூட புதிதாய் போனது 
உன் பதில் எனை சேர்ந்ததாலே....... 

சுட்டிடும் சூரியன் தட்பம் தந்தான் 
நீ எனை சேர்ந்ததாலோ........? 

கண்ணோரம் பட்டாம் பூச்சி 
காதோரக் காற்றும் உன் 
தீண்டலாய்................... 

கண்ணோக்கும் இடமெல்லாம் உன் விம்பங்கள் 
மாத்திரமே என் நிஜமாக..................... 

நிழலுடன் வாழ்கிறேன் உன்னுடன் 
வாழ்ந்திடும் நாட்களை எண்ணியவளாய்..... 
காலம் பதில் சொல்லும் என்று காத்திருக்கவில்லை 
காதல் வருகை எண்ணிக் காத்திருக்கின்றேன் 
இன்பம் சுமந்தவண்ணம்.......... 

No comments: