Saturday 10 December 2011

என்னை சிறைபடுத்தியவளே!


ஒரு சுதந்திர தின விழாவில்
என்னை சிறைபடுத்தியவளே!
என்னை
ஒரு துண்டுகளாக
உடைத்து போட்டவளே!

நிறைய லட்சியங்களோடு
நீயும்
நீ மட்டுமே லட்சியமாக
நானும் . . .
அன்று
உனது பாதங்களைதான்
சுமேரு மலையென்று நினைத்து
ஒரு சொர்கத்தை
தேடி கொண்டிருந்தேன்.

உன்னை
ஒரு திசைகாட்டியாக
எதிர்பார்த்தபோது
நீயே
எனது திசையாக
மாறிப்போனதை . . .

என் லட்சியத்தை அடைய
உன்னை
ஒரு வழித்துணையாய் எதிர்பார்த்தபோது
நீயே எனது லட்சியமாகிவிட்ட . . .

என் வாழ்க்கை படகிலே
நீ
துடுப்பாகி இருப்பாயென்று
நினைத்தபோது
துளையாக அல்லவா மாறிப்போனாய்.

எது எப்படியோ
இன்று
நீ
உனது பாதையில்
நான்
எனது பாதையில்
நிறைய கிழிசல்களோடு. 

No comments: