Tuesday 20 December 2011

ஆசை!...


கபடமில்லா உன்
சிரிப்பை காண ஆசை!
கோபத்தில் சிவக்கும் உன்
கன்னங்கள் காண ஆசை!
உதட்டோரம் சிந்தும் உன்
புன்னகை காண ஆசை!
பிடித்த சுவையை ருசிக்கும் உன்
முகபாவனை காண ஆசை!
ஒவ்வாத சுவையை உணரும் உன்
முகபாவனை காண ஆசை!
ஊஞ்சலில் ஆடும் உன்
உருவம் காண ஆசை!
ஆடுகையில் உள்ளப்பூரிப்பில் உன்
செயல் காண ஆசை!
கீழே விழ நேரும்போது உன்
பயம் காண ஆசை!
பயத்தில் உன்
சிரிப்பை காண ஆசை!
திட்டும் போது சுளிக்கும் உன்
முகம் காண ஆசை!
வாய்விட்டு அழமுடியாமல்
கண்ணீர் சிந்துவதை காண ஆசை!
அழுது முடித்து களைத்த உன்
முகம் காண ஆசை!
என்னோடு கோபம் கொண்டும்
திருப்பும் உன் முகம் காண ஆசை!
இத்தனை ஆசைகள்
எனக்கிருந்தும்
இவற்றுள் ஏதேனுமொன்று
உனக்கும் உளதா என
தெரிந்து கொள்ள ஆசை!...

No comments: